Labels

Showing posts with label திருக்குறள் கதைகள். Show all posts
Showing posts with label திருக்குறள் கதைகள். Show all posts

Thursday, December 11, 2014

7. மக்கட்பேறு

"தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
 மன்னுயிருக்கு எல்லாம் இனிது ."
(தம் மக்களின் அறிவுடைமை , பெற்றோர் தமக்கு இன்பம் பயப்பதைக் காட்டிலும் இம் மாபெரும் உலகத்தில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் இன்பம் பயப்பதாகும்)

நல்லதம்பியின் பிள்ளைகள் இருவரும் பாவலரின் வழிகாட்டுதலில் அறிவுமிக்கவர்களாக
வளர்ந்துள்ளனர். பெரியவன் பாவாணன் இரண்டாம் ஆண்டு வேதியல்(chemistry) படிக்கிறான்.
பாடத்திட்டத்தில் உள்ள நூல்களோடு படிப்பை நிறுத்திக்கொள்வதில்லை. நூலகத்தில் உள்ள மூல நூல்களை வீட்டுக்கு எடுத்து வந்து குறிப்புகள் எடுத்துக்கொள்வான் .90% மதிப்பெண் பெற்று வகுப்பில் முதல் இடத்தைத் தக்க வைத்துக்கொள்வான். துணைப் பாடமான இயற்பியலிலும்(physics) அதே போல் நன்கு படித்து முதலிடம் பெறுவான். வேதியல் கழகத்தின் கூட்டங்களில் வேதியல் தலைப்புகளில் தமிழில் உரையாற்றுவான்.

Tuesday, November 25, 2014

6. வாழ்க்கைத்துணைநலம்

"மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான் .
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை ."

நல்லதம்பி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். ஓய்வுஊதியம் 25000 அளவில்தான் இருக்கும். வேறு வருமானம் கிடையாது. ஆனாலும் மனோன்மணி கணவருக்கு கிடைக்கும் வருவாயில் குடும்பத்தை சிறப்புற நடத்தும் பெண்மணி ஆவார்.

Friday, November 21, 2014

5. இல்வாழ்க்கை

" இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
  நல்லாற்றின் நின்ற துணை ."

மணிவண்ணன் நெல்லை  மாநகரில் துணிக்கடை நடத்திவரும் ஒரு வணிகர். அவருடைய கடையில் பத்துப்பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுப்பதால் அவர்கள் அடிக்கடி கடைமாறிச் செல்வதில்லை . வருவாயைக் கணக்கிட்டு வருமான வரி கட்டிவிடும் நேர்மையாளர். புத்தாண்டு , பொங்கல் போன்ற விழாக்காலங்களில் தள்ளுபடி கொடுப்பதால் கூடுதல் விற்பனை கிடைக்கும் .

அவருடைய பெற்றோர் இருவரிடமும் பேரன்பு உடையவர் . அவர்கள் விரும்புவதைத் தக்க நேரத்தில் வாங்கிக் கொடுப்பார் . முகம் கோணாமல் நடந்து கொள்வார். முதுமை கரணியமாக ஏற்படும் சிக்கல்களுக்கு மருத்துவரிடம் அழைத்துச் சென்று தீர்வு காண்பார்.

Thursday, November 20, 2014

4. அறன் சிறப்பு

“அழுக்காறு அவா  வெகுளி  இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் ."

தமிழாசிரியர் பொன்னம்பலம் மேற்கண்ட குறளுக்கு விளக்கம் சொல்கிறபோது , வள்ளுவர் பொறாமை , பேராசை , கொடுஞ்சினம் , கடும்சொல் நான்கும் விலக்கி வாழ்வதே அறம் என்று சொல்லிருப்பதைச் சுட்டிக்காட்டினர். அறிவியல் கோட்பாடுகளுக்கு வரையறை (definition) சொல்வதைப்போல் இருக்கிறது என்றார்.

3. துறந்தார் சிறப்பு

" செயற்கரிய  செய்வார்  பெரியர் சிறியர்
 செயற்கரிய செய்கலாதார் . "  

தமிழாசிரியர் பொன்னம்பலம் நல்ல புலமையும் உலக அறிவும் உடையவர்.மேற்கண்ட குறளுக்கு விளக்கம் சொல்லும்போது மாணவர்கள்  செயற்கரிய செய்த பெரியர் ஒருவரைச் சொல்லுங்களேன் என்று கேட்டனர்.ஏன் நம் பெரியாரையே எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

ஈரோடு   வெங்கட்ட நாயக்கரின் மகன் இராமசாமி வைதீகத்தில்   திளைத்த செல்வக்குடும்பத்தில் பிறந்தார்.இளம் வயதில் குறும்புக்காரர் . வீட்டுக்கு வரும் வைதீகப் பண்டிதர்களிடம் வாதம் செய்து அவர்கள் தவறு என்ற  அடிப்படை  அறிவை வளர்த்துக்கொண்டார். காலப்போக்கில் வேத, புராண, இதிகாசங்களைப்  படித்துக் கடவுள்  இல்லவே இல்லை என்கிற முடிவுக்கு வந்தார். கடவுளோடு மதமும் ,மதத்தோடு சாதியும் பின்னிப் பிணைந்திருப்பத்தைக் கண்டார் .கடவுள், மதம் ,சாதி மூன்றையும் ஒழிக்கப் பாடுபட்டார்.

2. வான்சிறப்பு

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்  துப்பார்க்குத்
 துப்பாய தூஉம் மழை” .

 பாவலர் சமூகப்பணிகளில்  ஆர்வம் உடையவர் .தன்னாலியன்ற தொண்டறத்தைச்
சமூகத்திற்கு ஆற்றும் இயல்பினர் . ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரங்களில்
திருக்குறள் வகுப்பு நடத்துவது அவருடைய பணிகளில் ஒன்று .இளைஞர்கள்
குறளின் பொருளைத் தெரிந்து கொள்வதோடு வினாக்களை எழுப்பித் தங்கள்
அய்யங்களையும் போக்கிக்கொள்வர் .

1. அறத்துப்பால் - அறிவன் சிறப்பு (கடவுள் வாழ்த்து )

நல்லூர் நெல்லைக்கு அருகிலுள்ள ஒரு சிற்றூர் .அந்த ஊரில் தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றவர் பாவலர் .அவர் வாலறிவர்; மக்கள் மனங்களில் பொருந்தியிருக்கும் சான்றோர்; வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்; ஐம்பொறிகளை அடக்கியவர் ; தனக்குவமை இல்லாதவர் ;அறக்கடலாக விளங்குபவர்; எண்ணிலடங்கா நல்ல பண்புகளை உடையவர் ;பிறவிப்பெருங்கடலைக் கடக்கத் துணையாக நிற்பவர்.