Saturday, September 17, 2016

எஸ்.பி .செல்வமணி 78 - இரங்கல் கவிதை

பெரியாரின்    சுயமரியாதை இயக்கத்தில்  ஈடுபாடு
கொண்ட காரைக்குடி இராம சுப்பையா - விசாலாட்சியின்
சமதர்ம இல்லத்தில்  22.3.1939..ல் தோன்றினீர்கள்
சுயமரியாதை  வீரர் சர் ஏ .டி .பன்னீர் செல்வத்தின்
நினைவாக செல்வமணி என்று பெயர் சூட்டினார்கள்
சமதர்ம இல்லத்தில் இரண்டு வயதில் இறந்து போன
இலெனின் மாமாவையும் இல்லறம் ஏற்று இரண்டு
பிள்ளை களையும் பெற்றுவிட்டு 1974ல் இறந்து
போன இந்திரா சித்தியையும்  சேர்த்து எட்டு
விழுதுகள் அதில் நீங்கள் நான்காவது  விழுது

படித்தீர்கள் மீ .சு .பள்ளியில்
பெற்றீர்கள்  பட்டயம் அழகப்பர் பல்தொழில் பயிலகத்தில்
ஆற்றி னீர்கள் அரசுப்பணி பட்டுக்கோட்டையில்
நெய்வேலியிலும் பணியாற்றினீர்கள்
மீண்டும் வந்தீர்கள் சென்னை பொதுப்பணித் துறைக்கு
தலைமைப் பொறியாளர் பாராட்டும் படி நடந்தீர்கள் 
ஊழல் மட்டும் செய்ததில்லை

அத்தையோ ஆத்தங்குடி ஆறுமுக நாவலர்
பள்ளி, சிதம்பரத்தில் படித்தார்கள்
1964 ல் இல்லறம் ஏற்றீர்கள்
தமிழாசிரியை . பெற்றார்கள்  நல்லாசிரியை
விருது தளபதி ஸ்டாலின் கையால்
அத்தையோ சைவம் நீங்கள் அசைவம்

பொன் இளங்கோ ,இராமசாமி ,விசாலாட்சி ,வள்ளியப்பன்
நால்வரையும்  பெற்றீர்கள் மூத்த பிள்ளைக்கு
சுயமரியாதை இயக்க  வீரர் பொன்னம்பலனார் பெயரையும்
அவர் தம்பி இளங்கோவன் பெயரையும் சேர்த்து  பெயர்  சூட்டினீர்கள்
பொன்  இளங்கோ பொறுப்பான பிள்ளை நீங்கள் இருவரும்
வேலைக்குச்செல்வதால் பார்த்துக் கொள்வான் தம்பி,தங்கைகளை
நான்கு பிள்ளைகளும் நல்ல பிள்ளைகள்


உங்களுக்கு உண்டு குடும்ப நண்பர்கள்
வடிவேலு ,வைரவசுந்தரம் ,கோவை பாலு ,கோபால் அண்ணன் ,
பொறியாளர் பெரியசாமி,ஜெயராமன் ,மருத்துவர் செல்வராஜ் 
போன்றோர் இது வள்ளுவர் சொன்னதைப் போல் நெஞ்சத்து
அகநக நட்பதான நட்பு  



எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நேரத்துக்கு  வருவீர்கள்
அதேபோல் மற்றவர்களும் வரவேண்டும் என்று எதிர் பார்ப்பீர்கள்
எதையும் திட்டமிட்டு செய்வீர்கள் எழுதுவீர்கள் வீட்டுக் கணக்கை
உடுத்துவீர்கள் உடைகளை அழகாக எல்லா நிழற்படங்களையும் பாதுகாத்து வைத்திருப்பீர்கள்
சமதர்ம இல்ல முகநூலில் யாருடைய பிறந்த நாள்
திருமண நாள்  வந்தாலும் போடுவீர்கள் பொருத்தமான படத்தை
1964 ல்  நடைபெற்ற உங்களின் திருமண அழைப்பு
அசோக்நகர் வீடு பால் காய்ச்சும் அழைப்பு வைத்திருக்கிறீர்கள் பாதுகாத்து 

சமதர்ம  இல்ல வீட்டை பழமை மாறாமல்
புதுப்  பொலிவோடு புதுப்பித்த மாமாக்கள்
நால்வருக்கும் எங்கள் பாராட்டுக்கள்
நீங்களும் நண்பர் பாலுவும் இருந்தீர்கள்
வழிகாட்டியாக .  நல்ல இடம் பார்த்து பிள்ளைகள்
நால்வருக்கும் மணமுடித்து வைத்தீர்கள் அத்தையும்  நீங்களும்
நல்ல சம்பந்திகளை பெற்றீர்கள்
நாலில்  ஒன்று சுயமரியாதைத் திருமணம் 
பெற்றீர்கள் மூன்று நல்ல மருமகள்களும்
ஒரு நல்ல மாப்பிள்ளையும் 


உங்களுக்கு நடந்தது இரண்டு அறுவைச் சிகிச்சை
பிள்ளைகள்  கொடுத்தார்கள் உழைப்பும்  பொருளும்
காப்பாற்ற  முடியவில்லை மருத்துவர்களால்
வாங்கிய புதிய மகிழுந்தில் கூட பயணிக்கவில்லை  
78 அகவை  போதுமென்று முடித்துக்  கொண்டீர்கள்
வாழ்க்கைப் பயணத்தை.   வணக்கம் உங்களுக்கு

Sunday, September 4, 2016


தந்தை பெரியார் கவிதை - செல்வம்

சர் பன்னீர்  செல்வம்  அவர்களின்  முழுப் பெயர்
ஆரோக்கியசாமி  தாமரைச்செல்வம்  பன்னீர்செல்வம்
கேம்பிரிட்ஜ் பல்கலையின் முன்னாள் மாணவர் 
இருந்தார் தஞ்சை மாநகராட்சித்தலைவராக
தஞ்சை மாவட்டக் கழக உறுப்பினர் கூட
தஞ்சை மாவட்டம் திருவையாறில்
இருந்தது மன்னர் மானியத்தில் நடைபெற்ற
சமற்கிருதக் கல்லூரி ஒன்று செல்வம்
உத்தரவிட்டார் தமிழும் அங்கே கற்பிக்க

அவர் இருந்தார் பொப்பிலி அரசரின் அமைச்சரவையில்
உள்துறை அமைச்சராக 1937 தேர்தலில் நீதிக் கட்சி
தோற்றது ஆனாலும் வென்ற சிலரில் அவர் ஒருவர்
சுயமரியாதை கூட்டங்களிலும் மாநாடுகளிலும்
கலந்துகொண்டு எதிரிகளுக்கு பதில் கூறி வந்தார்


இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியாருக்கு
சிறை தண்டணை விதிக்கப்பட்ட போது
கலங்கா நெஞ்சினர் ஆன செல்வம் கலங்கினார்
1938ல் வேலூரில் கூடிய உணர்ச்சி மிக்க
தமிழர்மாநாட்டுக்கு தலைமை தாங்கினார்
சிறை செல்லு முன்பே  பெரியாரால் எழுதப்பட்டிருந்த 
மாநாட்டு விரிவுரையை படித்தார் பன்னீர்செல்வம்

அரசு நியமித்தது அவரை ஆலோசகராக
இந்திய மந்திரி சபைக்கு.  பெரியார்
எழுதினார் தலையங்கம் விடுதலையில்
நமது செல்வம் என்று.   நாட்டுக்கு இன்னும்
நல்லது செய்வார் என்று பெருமைப் பட்ட
பெரியார் நீதிக் கட்சிக்கு அடித்தளமாகவும்
உதவியாகவும் இருந்தவர் இந்த நெருக்கடியான
நேரத்தில் இந்தியாவை விட்டுப் பிரிந்து
செல்கிறாரே என்று வருத்தப் பட்டார்.

ஹனிபால் ஓமான்  கடலில்  விழுந்தது
செல்வம் இங்கிலாந்துக்கு சென்ற விமானம்
பெரியார் எழுதினார் மெய் நடுங்குகிறது
எழுதக் கை ஓடவில்லை
கண்கலங்கி மறைக்கிறது கண்ணீர் எழுத்துக்களை
அழிக்கிறது என்று.  பாழாய்ப் போன உத்தியோகம்
வந்ததும் போதும் தமிழர்களைப் பரிதவிக்க
விட்டு விட்டு மறைந்து விட்டார் என்றார்.


பெரியார்.விடுத்தார் வேண்டுகோள்
தமிழர்கள் கட்ட வேண்டும் கறுப்புக் கொடி 
வீடுகளில் என்றும் அடைக்கவேண்டும்
கடைகளை என்றும் கருப்புக் கொடி ஊர்வலம்
வந்து இரங்கல் கூட்டம் நடத்தி செல்வத்தின்
தொண்டை விளக்க வேண்டும்  என்றார்.

எழுதினார் பாவேந்தர் பன்னீர் செல்வம்  பற்றி
"மேலோங்கிய விண் விமானம் உடைந்ததோ
ஒலிநீர் வெள்ளம் தூங்கிய கடல் வீழ்ந்தானோ
துயர்க்கடல் வீழ்ந்தொம் நாங்கள்  "
2.4.1940 அன்று கடைப்பிடிக்கப்பட்டது
செல்வம்   நினைவு நாள்   திருச்சியில்

பேசினார்  பெரியார்.