Monday, April 9, 2018

குறுந்தொகை - பாடல் 117

மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல்அஞ்சிய பருவரல் ர்ஞெண்டு  
கண்டல் வேர்அளைச்  செலீஇயர் ,அண்டர்
கயிறுஅரி எருத்தின் கதழும் துறைவன்  
வாராது அமையினும் அமைக!
சிறியவும் உளஈண்டு விலைஞர் வளையே

பாடலின் பொருள்

மாரிக்காலத்து ஆம்பலைப் போன்ற கொக்கின் பார்வையை
வெருவியதாலான நண்டு கண்டல் மரத்தின் வேரிடத்தில் உள்ள வளியிடத்து செல்ல அண்டாது வலிகயிற்றை  அரிந்து பெரிய வல்லமையோடு வலையில் அழுத்தும்
து யினை உடையான் வாராமல் அமைவானாயிம் 
அமைந்திடுக ,சிரியனவும் உள்ளன ,இங்கு வளையல் விற்பார் கையிடத்து வளைகள்
 

பாடலை பாடியவர் குன்றியனார்

குறுந்தொகை - பாடல் 100

"அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருவிலிக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பின்
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனனே
மணத்தற்கு அரிய, பணைப்பெருந் தோளே'"
 
பாடலின் பொருள் :

மலையருவியினை உடைய பரந்த நிலத்தின் கண் மலைநெல்லினை விதைத்து அந்நிலத்திடையே முளைத்த பசிய இலையினை உடைய
மலை மல்லிகையும் பசியமரலுமாகிய களையினைப் பறிக்கின்ற 
காந்தள்ஆகிய வாழ்வேலியை  உடைய சிறு குடி வாழ்வோர்
பசிப்பாராயின் தறுகண் மை உடைய யானையினது மருப்பினை
வல்வில் ஓரியின் கொல்லி மலைக்கண் எழுதப்பட்ட பாவைதன்னி
கண்டார்க்கு மடமை வரச் செய்பவள் ஆவாள் மூங்கில் போன்ற பெரிய
தோள்கள் தழுவுவதற்கு அரியன வாகும்

பாடலை பாடியவர்  கபிலர்


Sunday, April 1, 2018

குறுந்தொகை - பாடல் 96

"அருவி வேங்கைப் பெருமலை  நாடற்கு
யானெவன்  செய்கோ என்றி; யானது
நகையென உணரேன் ஆயின்
என்னா குவைகொல்? நன்னுதல்! நீயே  "

பாடலின் பொருள் :

நல்ல நெற்றியை உடைய தோழியே அருவியையும் வேங்கை மரங்களையும்
பெரிய மலைகளை உடைய  நாட்டை உடைய தலைவன் பால் உள்ள
குறைக்கு என்ன பரிகாரம் செய்ய வல்லேன் என்று கூறா நின்றவனை
நீ அவ்வாறு பொருட்டு கூறிய விளையாட்டு மொழி என்று நினையாது
வாய்மை என்று கருதி விடுவேனாயின்  நீ என்ன தன்மை
உடைமை ஆகுமை

பாடலை பாடியவர் அள்ளுர் நன்முல்லையார்