ஏற்கனவே
வலைப்பூவில் இருந்த கவிதை தான்
காணாமல்
போய்விட்டது அதனால் மறுபடியும் போட்டிருக்கிறேன்
*அப்பா வைத்த பெயர்
முதல் அடையாளம் -நாளும்
அடுத்தவரை
நேசிப்பது
அன்பின் அடையாளம்
*மழலைச்செல்வமோ
காதலின்
அடையாளம் -காட்டும்
மனித
நேயமே
மானுட
அடையாளம்
*கற்றவழி நிற்பது
கல்விக்கு
அடையாளம் -வாழ்வில்
குறள்வழி
நடப்பது
சான்றோர்க்கு
அடையாளம்
*மானமும் அறிவும்
மனிதருக்கு
அடையாளம் -போற்றும்
பெரியார்
எனும் பெயர்
தொண்டின்
அடையாளம்
*சங்க இலக்கியம்
தமிழுக்கு
அடையாளம் -கனல்மிகு
புரட்சிக்
கவிஞரே
நல்ல
கவிதைக்குஅடையாளம்
*பொங்கல் திருநாள்
தமிழர்க்கு
அடையாளம் -என்பதால்
புத்தாண்டு
தை முதலானது
வரலாற்று
அடையாளம்
*கலைஞருக்குப் பாராட்டு
நம்
நன்றியின் அடையாளம் -செட்டிநாட்டில்
காரைக்குடி
இராம சுப்பையா
பகுத்திறிவின்
அடையாளம்