" வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை
ஆகுமதி
யார ஃ
தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கியாங்கு
இவளுயிர் தவச்சிறிது காமமோ பெரிதே
"
பாடலின் பொருள் :
மூங்கிலாகிய வேலியினையும் வேரின் கண்ணே
பழம் பழுத்தலைக்
கொள்ளும் பலாமரத்தினை உடைய மலைச்சாரலை
உடைய நாட
செம்மை உடையனாதலைக் கைக்கொள் ; எவர் அதனை
அறிந்தார் ?
சாரற் கண்ணே சிறிய கோட்டிடத்துப் பெரிய பழம் தொங்குவது போன்று
இவளுயிர் மிகச் சிறியது.இவளுற்ற காமமோ
பெரிய தாயிருக்கின்றது .
ஆதலின் நூற்றக் கணக்கான ஊறுகொண்ட ஆற்றிடத்து இரவு வருதலை
இனி விட்டு வரைந்து கொள்
பாடலைப் பாடியவர் கபிலர்
நயம்: தலைவன்அவளை மணந்து இல்லறம் பேணுவதற்கான உணர்வு எழும் என்பதாம்