Tuesday, May 31, 2016

பட்டம்

பெண்ணுரிமை இல்லாமல்
சமூக சீர்திருத்தம்
கிடையாது என்றார்
குழந்தை திருமணத்தால்
1921ல் 3.29 லட்சம் விதவைகள்
இருந்தனர் விதவைகளுக்குத்
திருமணம் செய்ய வேண்டும்
 
கற்பு இருபாலருக்கும்
பொதுவாக இருக்கவேண்டும்
என்றார் ஒருவரை ஒருவர்
அறிந்துகொள்ள காதல்
வேண்டும் என்றார்
உடல் தொடர்பு கூடாது
என்றார் மணமுறிவுக்கு
உரிமை வேண்டும் என்றார்

பெண்களுக்கு சொத்துரிமை
வேண்டும் என்றார்
பெண்கல்வி கட்டாயம்
வேண்டும் என்றார்
வேலைவாய்ப்பில் ஆணுக்கு
நிகராய் இருக்கவேண்டும்
காவல்துறையிலும் இராணுவத்திலும்
பெண்கள் வேலைபார்க்க  வேண்டும்

பிள்ளைப் பேற்றிலும்
பிள்ளை வளர்ப்பிலும்
ஆணுக்குப் பங்குண்டு  
தேவதாசி முறை ஒழிப்பு
பெண்விடுதலையைப்
பெண்களே  தேடிக்கொள்ள
வேண்டும் ஆண்களால்
கிடைக்கும் என்பது
எலிக்குப் பூனை நன்மை செய்யும்
என்பதைப் போன்றதே
என்றார் ஈவெரா
அவரைப் பாராட்டும்
வகையில் மறைமலை அடிகளாரின்
திருமகளார் நீலாம்பிகை
அம்மையார் தலைமையில்
நடைபெற்ற  மகளிர் மாநாட்டில்
ஈவெரா வுக்குப் பெரியார் பட்டம்
கொடுத்துச் சிறப்பித்தார்கள்

திருவள்ளுவர் சொன்னதைப்போல்
ஈவெரா செயற்கரிய செய்த
பெரியார் ஆவர் எனவே
இந்தப்  பட்டம் அவருக்குப்
பொருத்தமானதே  ஆகும் 




Monday, May 9, 2016

இந்தி

1937ல் நீதிக்கட்சி படுதோல்வி
அடைந்தது காங்கிரஸ்
வெற்றி பெற்றது
ராஜகோபாலாசாரியார் முதல்வரானார்

பள்ளிகளில் இந்தியைப்
புகுத்தினார். மறைமலை அடிகள்,
சோமசுந்தர பாரதி , கி ஆ பெ விசுவநாதம்   
எல்லோரும் எதிர்த்தனர்
ஈவெரா தடயைமீறி
சிறைப்பட்டார் 167 நாட்கள் 
பெல்லாரி சிறையில்
அடைக்கப் பட்டார்
சிறையில் 190 பவுண்டு
எடையிருந்த ஈவெரா
166 பவுண்டாகக் குறைந்தார் 


வழக்கம்போல் எதிர் வழக்காடவில்லை
நீதிபதியின் மீதும்
அரசாங்கத்தின் மீதும்
நம்பிக்கையில்லை  என்று
வாக்குமூலம் மட்டும் கொடுத்தார்

தாலமுத்துவும் நடராசனும்
சிறையிலேயே மாண்னர்
ஈவெரா நினைவுத் தூண்
எழுப்பினார் பிற்காலத்தில்
சென்னையில் எம் எம் டி எ
கட்டிடத்துக்கு தாலமுத்து நடராசன்
மாளிகை என்று கலைஞர் பெயர் சூட்டினார்

1271 பேர் சிறைத்தண்டனை பெற்றனர்
ஈவெரா வை விடுதலை செய்த அரசு  
படிப்படியாக மற்றவர்களையும்
விடுதலை செய்தது
ஈவெரா  சிறையிலிருக்கும்போதே
நீதிக்கட்சித் தலைவரானார்

தமிழர் படை அமைக்கப்பட்டது
திருச்சியிலிருந்து புறப்பட்டு
வழியெல்லாம் பிரசாரம்
செய்து கொண்டு சென்னை
வந்தடைந்தனர் வரவேற்பு
1 லட்சம் பேர் கலந்து
கொண்ட கடல்கரைக் கூட்டம்

தமிழ்நாடு தமிழருக்கே
என்று அறிவித்தார்
1001 ரூபா பணமுடிப்பு
சென்னையில் வழங்கப்பட்டது
மற்ற ஊர்களிலும் பணமுடிப்பு
வழங்கப்பட்டது வணிக வரியை
உயர்த்தியதால் வணிகர்களும் 
போராட்டத்தில் கலந்து கொண்டனர்

ஈவெரா தமிழர் தலைவர் ஆனார்.