பெரியாருக்குப் பிறகு என்னுடைய
வலைப்பூவில் சங்கத் தமிழ் குறுந்தொகையைப்
பற்றி மாதத்தின் 1ஆம் நாள் , 10ஆம் நாள், 20ஆம் நாள் எழுத இருக்கிறேன்.அனைவரும் படிக்க வேண்டுகிறேன். நன்றி .
குறுந்தொகை
சங்க இலக்கியம் எட்டுத் தொகையும்
பத்துப் பாட்டுமாகும்
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்
புறமென்று
எட்டுத் தொகை எங்கிற வெண்வபாவால்
எட்டுத்தொகை
நூல்களை அறியலாம் பத்துப் பாட்டு
நூல்கள்
திருமுருகாற்றுப் படை பொருநர் ஆற்றுப் படை
சிறுபாண் ஆற்றுப்
படை பெரும் பாண் ஆற்றுப் படை
முல்லைப் பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல் வாடை குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை மலைப்படு கடாம்
குறுந்தொகை சங்க இலக்கியத்தில் எட்டுத்
தொகையுள்
அடங்கும் நல்ல என்கிற அடைமொழியும்
உண்டு
காதல் பாடல்கள் 4முதல் 8 வரை அடிகள் உடையவை
கடவுள் வாழ்த்தை பாரதம் பாடிய
பெருந்தேவனார் பாடியிருக்கிறார்
அவரைத் தவிர்த்து 205 புலவர்கள் காணப்
படுகின்றனர் .பெயர்
தெரியாத பாடல்கள் 10 உள குறுந்தொகையில்
400 பாடல்கள் உள்ளன
ஒரு பாடல் இறையனார் இயற்றியது
’’கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
மணமும் உளவோ நீ அறியும் பூவே ‘’
இதன் பொருள் ; இவள் கூந்தல் போன்று இனிது மணக்கும்
மலர் இதுவரை அறிந்திலேன்
மலர் தொறும் சென்று ஆராயும் வண்டே நீ சொல்
இந்தப் பாடலைப் பாடி பாண்டியன் அவையில்
தருமி பொற்கிழி பெறுகிறான் நக்கீரனார்
பாடலில்
பொருட் குற்றம் இருப்பதாக கூறுகிறார்
இறையனாரே
அவைக்குச் சென்று வாதிடுகிறார் ஆனாலும்
நெற்றிக்
கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே
என்கிறார்
நக்கீரனார் இது திருவிளையாடல் கதையும்
கூட.