"அம்ம வாழி தோழி யாவதும்
தவறெனின் தவறோ இலவே -வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்
அரிய கானஞ் சென்றோர்க்கு
எளிய ஆகிய தடமென் தோளே "
பாடலின் பொருள் :
தோழி கேட்பாயாக பாலைநில வழியே சென்று கள்வராலே கொல்லப்பட்ட அவருடைய உடலை மூடுதற்கு தழையை இட்ட கற்குவியல் நெடிய நல்ல யானைகட்கு செயற்கை நிழலாகப் பயன் படுகின்ற கடத்தற்கரிய பாலை நிலம் சென்ற தலைவர் பொருட்டு ஆற்றாமையின் மெலிந்து இளைத்த பெரிய தோள்கள் சிறிதும் தவறுடையன ஆக மாட்டா
பாடலை பாடியவர் மதுரை மருதன் இளநாகனார்