நல்லதம்பிஓய்வுபெற்றஅரசுஊழியர். ஓய்வுஊதியம் 25000 அளவில்தான்இருக்கும். வேறுவருமானம்கிடையாது.
ஆனாலும் மனோன்மணி கணவருக்கு கிடைக்கும் வருவாயில் குடும்பத்தை சிறப்புற நடத்தும் பெண்மணி
ஆவார்.
மணிவண்ணன் நெல்லை மாநகரில்
துணிக்கடை நடத்திவரும் ஒரு வணிகர். அவருடைய கடையில் பத்துப்பேர் வேலை செய்கிறார்கள்.
அவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுப்பதால் அவர்கள் அடிக்கடி கடைமாறிச் செல்வதில்லை . வருவாயைக்
கணக்கிட்டு வருமான வரி கட்டிவிடும் நேர்மையாளர். புத்தாண்டு , பொங்கல் போன்ற விழாக்காலங்களில்
தள்ளுபடி கொடுப்பதால் கூடுதல் விற்பனை கிடைக்கும் .
அவருடைய பெற்றோர் இருவரிடமும் பேரன்பு உடையவர் . அவர்கள் விரும்புவதைத்
தக்க நேரத்தில் வாங்கிக் கொடுப்பார் . முகம் கோணாமல் நடந்து கொள்வார். முதுமை கரணியமாக ஏற்படும் சிக்கல்களுக்கு மருத்துவரிடம் அழைத்துச் சென்று தீர்வு காண்பார்.
தமிழாசிரியர் பொன்னம்பலம் மேற்கண்ட குறளுக்கு விளக்கம் சொல்கிறபோது
, வள்ளுவர் பொறாமை , பேராசை , கொடுஞ்சினம் , கடும்சொல் நான்கும் விலக்கி வாழ்வதே அறம்
என்று சொல்லிருப்பதைச் சுட்டிக்காட்டினர். அறிவியல் கோட்பாடுகளுக்கு வரையறை
(definition) சொல்வதைப்போல் இருக்கிறது என்றார்.
தமிழாசிரியர் பொன்னம்பலம் நல்ல புலமையும் உலக அறிவும் உடையவர்.மேற்கண்ட
குறளுக்கு விளக்கம் சொல்லும்போது மாணவர்கள்
செயற்கரிய செய்த பெரியர் ஒருவரைச் சொல்லுங்களேன் என்று கேட்டனர்.ஏன் நம் பெரியாரையே
எடுத்துக் கொள்ளலாம் என்றார்.
ஈரோடு வெங்கட்ட நாயக்கரின்
மகன் இராமசாமி வைதீகத்தில் திளைத்த செல்வக்குடும்பத்தில்
பிறந்தார்.இளம் வயதில் குறும்புக்காரர் . வீட்டுக்கு வரும் வைதீகப் பண்டிதர்களிடம்
வாதம் செய்து அவர்கள் தவறு என்ற அடிப்படை அறிவை வளர்த்துக்கொண்டார். காலப்போக்கில் வேத, புராண,
இதிகாசங்களைப் படித்துக் கடவுள் இல்லவே இல்லை என்கிற முடிவுக்கு வந்தார். கடவுளோடு
மதமும் ,மதத்தோடு சாதியும் பின்னிப் பிணைந்திருப்பத்தைக் கண்டார் .கடவுள், மதம் ,சாதி
மூன்றையும் ஒழிக்கப் பாடுபட்டார்.
நல்லூர் நெல்லைக்கு அருகிலுள்ள ஒரு சிற்றூர்
.அந்த ஊரில் தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றவர் பாவலர் .அவர் வாலறிவர்; மக்கள்
மனங்களில் பொருந்தியிருக்கும் சான்றோர்; வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்; ஐம்பொறிகளை
அடக்கியவர் ; தனக்குவமை இல்லாதவர் ;அறக்கடலாக விளங்குபவர்; எண்ணிலடங்கா நல்ல பண்புகளை உடையவர் ;பிறவிப்பெருங்கடலைக்
கடக்கத் துணையாக நிற்பவர்.