Monday, August 22, 2016

அம்பேத்கர்

பிறந்ததோ மகர் சாதியில்(தலித்)
பெற்றதோ பாரத ரத்னா பட்டம்
அழைக்கப் பட்டார் பாபா சாகேப் ஆக
பெற்றார் இரு முனைவர் பட்டங்கள்
கொலம்பியா பல்கலையில் ஒன்றும்
இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் ஒன்றுமாக

பாடுபட்டார்  தலித்துகளின்அரசியல் ,சமூக
விடுதலைக்காக ஒடுக்கப்பட்டோருக்காக
கேட்டார் தனித் தொகுதிகள் மகாத்மா எதிர்த்தார்
அது  இந்துக்களைப் பிரிக்கும் என்று  சொல்லி
கையெழுத்திட்டார் அம்பேத்கர்   பூனா ஒப்பந்தத்தில்
 
சாதி ஒழிக்கும் வழி ,சூத்திரர்கள் யார் ,
புத்தரும் அவருடைய தம்மமும் போன்ற
நூல்களை எழுதினார். ஆதரித்தார்  அவர்
நாட்டுப் பிரிவினையை.  ஆனார் அவர்
முதல் சட்ட அமைச்சராக ; துறந்தார்
அதையும் சில ஆண்டுகளில்
திகழ்கிறார் அவர் இந்திய அரசியல்
சட்ட சிற்பியாக. அனுபவித்தார்
துன்பங்களை   இந்து  மதத்தில்
மாறினார் மதம் புத்தரை நோக்கி
500000 தோழர்களோடு;
  
1940  ல் பெரியார்  அம்பேத்கர்  ,ஜின்னா , எம்.ஆர்.ஜெயகர்
முதலிய தலைவர்களைச் சந்திப்பதற்காக
அண்ணாவையும் தோழர்கள் சிலரையும்
அழைத்துக்  கொண்டு சென்றார் மும்பைக்கு
அம்பேத்கர் அளித்தார் விருந்து பெரியாருக்கு
தனது மாளிகையில் இருவரும் பேசினார்கள்
அரசியல் சமூக மாற்றங்கள் பற்றி நெடுநேரம்
மறுநாள் மாலை அம்பேத்கர் அளித்தார்
தேநீர் விருந்து பெரியாருக்கு கோகலே
கல்விக் கழகத்தில் அன்று இரவு
அம்பேத்கர்  தலைமையில் தாராவியில் பேசினார்  பெரியார் 
பார்ப்பனீயத்தை ஒழிப்பதில்
பெரியார் கொள்கையை ஒத்துக்  கொள்வதாகவும்
பெரியார்  பேச்சுக்குத் தலைமை வகிப்பது
தன் வாழ்க்கையில்  கிடைத்த பெரும் பேறு
என்று குறிப்பிட்டார் அம்பேத்கார்

பெரியார் பார்ப்பனார்க்கள் தமிழர்கள்  அல்லர் என்றும்
அவர்கள்  ஆதிக்கத்திலிந்து விடுபட  தமிழ்நாடு
தனிநாடு ஆகவேண்டும்  பர்மா போல என்றார்
அண்ணாவின் இருமொழிப் புலமைக்குச்
சான்றாக இருந்தது அவர் அம்பேத்கரின்
ஆங்கிலப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்ததும்
பெரியாரின் தமிழ்ப் பேச்சை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்ததும் அம்பேத்கர் -பெரியார் சந்திப்பு
பற்றி செய்தி வெளியிட்டது மும்பை கிரானிகில் ஆங்கில நாளேடு

14.2.1942ல் திருச்சியில் தாழ்த்தப் பட்டோர்
மாநாட்டில் பெரியார் அம்பேத்கர் படத்தைத்
திறந்து வைத்து அம்பேத்கருடைய அரசியல்
ஞானமும் ,உயரிய கல்வி அறிவும்,ஊக்கமும்
குறித்துப் பேசினார் 23.9.1944 அன்று அம்பேத்கர்
பெரியார் இல்லத்துக்கு வந்துபேசிக் கொண்டிருந்தார்
ஒருமணி நேரம் வரவேற்றார் சேலம் மாநாட்டு
தீர்மானங்களை .பட்டம் ,பதவி நடுபவர்களை
பெரியார் பின்னுக்கு தள்ளியிருப்பது
அவருடைய கட்சிக்கு புத்துயிர் ஊட்டும்
என்று பாராட்டினார் .பெரியாருடன் இணைந்து
வைதிகம்  ,மனுதர்மம் முதலிய கொடுமைகளை
எதிர்த்துப் போராட விரும்பினார் என்று
ஆ .பத்மநாபன் ஐ .ஏ.எஸ் குறிப்பிடுகிறார்

உண்மை இதழில்

Thursday, August 4, 2016

பாவேந்தர்

பாரதிதாசன் இயற் பெயர்
கனக சுப்பு ரத்தினம் 
மகாகவி பாரதி  மீது
கொண்ட காதலால்
பாரதிதாசன் என்று
புனைந்து கொண்டார்


1920 இல் இருந்தது இறைநம்பிக்கை                                              
அவர் கவிதைகளில்

ஈர்த்தது அவரை
பெரியாரின் பகுத்தறிவு
திகழ்ந்தார் அவர்
புரட்சிக் கவிஞராக எப்போதும்

எழுதினார் அவர்
ஏராளமான கவிதைகளை
சொற்கள் எல்லாம் எளியவை
உவமைகள் ஒவ்வொன்றும் அரியவை

  
தமிழ், தமிழியக்கம் , இந்தி  எதிர்ப்பு ,
 காதல் ,பெண்விடுதலை , இயற்கை ,
பார்ப்பன எதிர்ப்பு  போன்ற
தளங்களில் எழுதிக் குவித்தார்
.
வெளியிட்டதோ நான்கு கவிதைத் தொகுதிகள்
நல்லதோர் குடும்பத்தைக்  காட்ட குடும்ப  விளக்கு 
அதில் ஐந்து  தொகுதிகள் . நன்றல்லாததைக் காட்ட
ஒரு இருண்டவீடு, புரட்சிக்கவி
(பில்கணீயம்   என்கிற வடமொழி நூலின்  தழுவல் )
பாண்டியன் பரிசு போன்ற காப்பியங்கள்
இன்னும்  ஏராளமான கவிதைகளை
இயற்றினார் புரட்சிக் கவிஞர்
தமிழ்  உலகம் போற்றுகிறது அவரை
பாவேந்தர் என்று பாராட்டி
சிலைகள் வைத்திருக்கிறது
அவர் வாழ்ந்த  வீட்டை
புதுவை அரசு நினைவிடமாக
மாற்றியுள்ளது

எழுதினார் பாவேந்தர்
பெரியார் பற்றியும்

1. வயதில் அறிவில் முதியார்
  வாய்மைப் போருக்கு
  என்றும் இளையார்
  உயர் எண்ணங்கள்
  மலரும் சோலை

2. தொண்டு செய்து பழுத்த பழம்
   தூய தாடி மார்பில் விழும்
   மண்டைச் சுரப்பை
   உலகு தொழும்
   மனக்குகையில் சிறுத்தை எழும்


நாமக்கல்லைச் சேர்ந்த செல்லப்ப செட்டியார்
நல்லதோர் தமிழ்த்  தொண்டர்
எண்ணம்  எழுந்தது புரட்சிக் கவிஞருக்கு
நிதி திரட்டிக் கொடுத்தால் என்னவென்று
சொன்னார் அதைப் பெரியாரிடம்
பெரியார் அமைத்தார் நிதிக்குழு ஒன்றை
நிதிக்குழுவில்  பெரியார்,செல்லப்ப  செட்டியார்
தவிர ஆர்.கே .சண்முகம் ,டாக்டர் ஏ கிருட்டிணசாமி,  
மேனாள் அமைச்சர் இராமநாதன்,மேனாள் அமைச்சர் முத்தையா முதலியார்,
அண்ணா  மற்றும் தோழர்கள் ,தோழியர்கள் சிலர்   இருந்தனர்

நிதிக்குழு 21.4.1945 ல்  குடியரசு இதழில் வெளியிட்டது வேண்டுகோள்
புரட்சிக்  கவிஞர் தமிழ் இலக்கியத்துக்கும்
தமிழர் சமூகத்துக்கும் செய்துள்ள ஒப்புயர்வற்ற
சேவையைப் பாராட்டும் பாங்கில் நிதி திரட்டிக்
கொடுப்பதெனத் தீர்மானித்துள்ளோம்
இதைச்  செய்வதன் மூலம் ஓரளவு
நன்றியும் பாராட்டும் செய்தவர்களாவோம்
ஆகவே  தமிழ் அன்பர்கள்  அனைவரும்
தாராளமாக நன்கொடை தருமாறு
கேட்டுக் கொள்கிறோம்
பெரியார் 150 ரூபாய்  அளித்தார்
நிதிப்  பொறுப்பாளர் கிருட்டினராஜ் ரெட்டியார்
விடுத்தார்  நினைவூட்டல் அறிக்கைகளை
வெளியிட்டார்  பெரியார் அதை குடியரசு  இதழில்
திருச்சியில் திராவிடர் கழக மாநாட்டில்
போட்டார்  தீர்மானம் நிதி வேண்டி

28. 7.1946அன்று நிதியளிப்பு  விழா
இடமோ  பச்சையப்பன் கல்லூரித்  திடல்
புரட்சிக்  கவிஞர்  பாடல்களை பாடியதோ
தண்டபாணி தேசிகர் தலைவரோ நாவலர்
சோமசுந்தர பாரதியார் திரண்ட நிதியோ
ரூபாய் 24,399 வழங்கியதோ  அண்ணா
பேசினார்கள் புரட்சிக் கவிஞரின் கவிதை
இன்பம் பற்றி மாநகர தந்தை என்.சிவராஜ் ,
இராதாகிருட்டிண  பிள்ளை,டி .செங்கல்வராயன்
டாக்டர் ஏ .கிருட்டிணசாமி ,இரா பி சேதுப்  பிள்ளை ,
குஞ்சிதம்  குருசாமி ,பி.சம்பந்த  முதலியார் ,
கி  ஆ .பெ .விசுவநாதம் மு . வரதராசனார்
ப .ஜீவானந்தம் .ம.பொ.சி,நாவலர் நெடுஞ்செழியன் ,
புலவர் வேணுகோபால் முதலியோர்
அண்ணா வின்  சிறப்பான  நிறைவுரை