சேயாறு செல்லாம் ஆயின் இடரின்று
களைஇக் காமம் பெருந்தோட்கு என்று
நன்றுபுரிந்து எண்ணிய மனத்தை யாகி
முரம்புகண் உடைய ஏகிக் களரிக்
கரம்பைப் புதுவழிப் படுத்த மதியுடை
வலவோய் இன்று தந்தனை தேரே
நோயுழந்து உறைவியை நல்க லானே .
பாடலின் பொருள் :
நீண்ட வெளியில் செல்வோமாயின், பெரும்தோளையுடைய தலைவியின் காமமாகிய துயரை இன்று களைதல் நம்மால் இயலாதென்று,
நல்லதை விரும்பி எண்ணிய மனத்துடன் பாகனே நீ தேரைச் செலுத்தினை!
அதாவது அவ்வாறு நல்லதை எண்ணிய விரைந்து கரம்பு நிலத்தில்
மனத்தையுடையை ஆகி , முரடான மேடுகள் உடையும்படி விரைந்து , கரம்பை நிலத்தில் புதுவழி கண்டு செலுத்திய அறிவுத்திறனுடைய தேர்ப்பாகனே ! காம நோயால் பிரிவுத்துயரில் உழன்று வருந்தி இருந்த தலைவியை ,நலமுடன் நீ தந்ததால் , இன்று நீ தேரை மட்டுமா ஊருக்குள் தந்தனை ? இல்லை ; என் தலைவியையே உயிருடன் தந்தனை! ! நீ போற்றுதற்கு உரியை !
இப்பாடலை எழுதியவர் பேயனார்