“பதலைப்
பாணிப் பரிசிலர் கோமான்
அரலைக்
குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்
குவளையொடு
பொதிந்த குளவி நாறுநின்
நறுநுதன்
மறப்பரோ மற்றே முயலவும்
சுரம்பல
விலங்கிய அரும்பொருள்
நிரம்பா
ஆகலின் நீடலோ இன்றே”
பாடலின்
பொருள் :
கிளைப்
பறவையை இயக்கித் தாளத்தோடு வாசிக்கும் பரிசிலர்
தலைவனது
அரலைஎனும் குன்றத்திலுள்ள அகன்ற
வாயை
உடைய ஆழமான சுனையில் பூத்த குவளை
மலர்களுடன்
சேர்த்துக் கட்டிய காட்டு மல்லிகைப்
பூக்கள்
மணக்கும் நின் நறுமணமுடைய நெற்றியைத்
தலைவர்
மறப்பாரோ ? மறக்க
மாட்டார் . பல பாலை நில
மறப்பாரோ
? மறக்க
மாட்டார் . பல பாலை நில
இடையிட்ட
நாடுகளிற் சென்று தேடும் அரிய பொருட்செல்வங்கள்
எவ்வளவு
முயன்றாலும் முற்ற முடியக் கிடைக்கப்பெறா
ஆகலின்
இனியும் பொருள் தேடுவதற்காக கால நீட்டிப்பு
செய்யார்
.விரைந்து திரும்புவார் .வருத்தத்தை
கைவிடு.
பாடலைப்
பாடியவர் மோசிகீரனார்