மணியம்மையாரின்
இயற்பெயர் காந்திமதி
10.3.1917ல் பிறந்தார்கள் வேலூரில் கனக
சபை
முதலியார் மகளாக தந்தை நீதிக் கட்சி
சார்புடையவர்
அவர் மறைந்ததும் காந்திமதி
1942-43ல் திராவிடர் கழகத்தில் இணைகிறார்
தோழர்
அண்ணல் தங்கோ காந்தி மதிக்கு அரசியல் மணி
என்று
பெயர் சூட்டினார் அது சுருக்கப் பட்டு கே ஏ மணி
என்றழைக்கப்
பட்டது 1949 வரையில்
பெரியாரைப்
பேண சில பெண்கள் முன்வரவேண்டும்
என்று
23.10,.1943
குடி அரசு இதழில் வேண்டுகோள்
விடுக்கிறார்
கே ஏ மணியம்மையார்
பெரியாருக்கு
நாக்கில் வலியும் நாற்றமும் இருந்தது
மருத்துவர்
சுந்தர வதனத்திடம் கொண்டுபோய் காட்டினார்
புற்றுநோய் அது என்று கூறி மருத்துவர் ராய்
அவர்களிடம்
அனுப்பினார்
ரேடியம் சிகிச்சை அளிக்கப்பட்டது பெரியாருக்கு நாக்கு முகம் எல்லாம் வீங்கிவிட்டது
நாக்கிலிருந்து சதா தண்ணீர் வடிந்தது பெரியார் கவலை அடைந்தார் உயிருக்கு பயந்தல்ல
நாயக்கன் நாத்திகன் அவன் கடவுளை மதத்தை திட்டினான் என்று கூறி பாமர
மக்களை
பார்ப்பனர்கள் ஏமாற்றுவார்கள் என்று
கருதினார்
மணியம்மையார் மருத்துவரிடம் முகம்
நாக்கு
எல்லாம் வீங்கியிருக்கிறதே தண்ணீர் வடிகிறதே
என்று
கேட்டார்கள் அவர் சிகிச்சை பலன் அளிக்கத்
தொடங்கியிருக்கிறது
சில நாட்களில் குணமாகி விடும்
என்று
கூறினார் பெரியாரைப் பற்றி
22.8.1948
அன்று பெரியார் இல்லத்தில் திராவிடர்
கழக
ஆலோசனைக் குழுக் கூட்டம் நடை பெற்றுக்
கொண்டிருந்த
போது இந்தி எதிர்ப்புக் காக காவல்துறை
மணியம்மையாரை
கைது செய்தது
29.3.49 சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு
மறியலை
பெரியார் பார்வையிட்டார்
மணியம்மையார்
முன் நின்றார்கள்
' விடுதலை' மீது அரசு கோரியிருந்த பிணையல்
தொகை
ரூ 10000 ஐ நீதிபதி முன்பு மணியம்மையார்
18.6.1949 அன்று கட்டினார்கள்
14 5.1949 அன்று திருவண்ணாமலை தொடர்
வண்டி
நிலையத்தில் தந்தை பெரியார்
காலை
6.46 முதல் 7.17 வரை தலைமை
ஆளுநர்
ஆக இருந்த இராஜாஜியை சந்தித்து
பேசினார்
அது பற்றி இராஜாஜி கூறியது
“நண்பர்
ஈ வெ ராமசாமி நாயக்கரை நான்
கண்டது
குறித்து பொது மக்கள் தீவிரமான
எண்ணம்
கொண்டிருக்கலாம் நானும்
அவரும்
சந்தித்துப் பேசியது முழுமையும்
அவர்
என்னுடன் கலந்து பேச விரும்பிய
சொந்த
விஷயங்களை பற்றியே ஆகும்
அவருடைய
அரசியல் பொது வாழ்க்கைக்கும்
இதற்கும்
எந்த சம்பந்தமும் இல்லை”
இராஜாஜியை
திருவண்ணாமலையில் சந்தித்தது
பற்றிப்
பெரியார் குறிப்பிட்டார் எனக்குப் பின் கட்சிக்கும்
என் சொந்தத்திற்கும் அடுத்த வாரிசு ஏற்படுத்த
வேண்டும்
அதைப்
பற்றி இரண்டொருவரை கேட்டேன் அதே போல்
இராஜாஜியையும்
கேட்டேன் சொந்த முறையில் அவர்
சில
யோசனை கூறினார் அதை இந்த சந்தர்ப்பத்தில்
கூற
வேண்டிய அவசியமில்லை காலா காலத்தில்
தெரிந்து
கொள்வீர்கள்
மேலும்
எனக்கும் எனது பொருளுக்கும் சட்டப்படியான
வாரிசாக
ஒருவரை ஏற்படுத்திக் கொள்வது அவசியமும்
அவசரமும்
ஆகும் நான் 5,6
வருடமாகப் பழகி
நம்பிக்கை
கொண்டதும் என் நலத்திலும் இயக்க
நலத்திலும்
உண்மையான பற்றும் கவலையும்
கொண்டு
நடந்து வந்திருக்கிறதுமான
மணியம்மையை
எப்படியாவது வாரிசுரிமையாக
ஆக்கிக்
கொண்டு அந்த உரிமையையும் தனிப்
பட்ட
தன்மையையும் சேர்த்து மற்றும் சுமார்
4,5
பேர்களையும் சேர்த்து இயக்க நப்புக்கும்
பொருள்
பாதுகாப்புக்ககுமாக ஒரு டிரஸ்ட் பத்திரம்
எழுத
ஏற்பாடு செய்திருக்கிறேன் அப் பத்திரமும்
எழுதப்பட்டு
வருகிறது
9.7.1949
பிற்பகல் 3.3.மணிக்கு
பெரியார் ஈ வெ ரா -
கே
ஏ மணியம்மையார் அவர்கள் பதிவுத் திருமணம்
பதிவாளர்
முன்னிலையில் பதிவு செய்யப் பட்டது
பதிவுத்
திருமணம் தி .நகரில் உள்ள பதிவாளர்
அலுவலகத்தில் நடைபெற்றது திருவாட்டி ஞானம்
நாயகம்
அவர்கள் சாட்சிக் கையொப்பம் இட்டார்கள்
பெரியார்
கருத்துப்படி அவர் ஆற்றும் தொண்டுக்கு
தொண்டின் நலனுக்கு ஒரு துணை ,ஒரு நட்பு, ஒரு
உதவி
தேடிக்கொண்டு அத்துனையைசெல்லுபடியாகும்
அளவுக்கும்
சட்டப்படி பதிவு செய்து கொண்டுள்ளார்
வாழ்க்கைத்
துணை ஒப்பந்தப்படி ஏற்படும் வாழ்வு
வாழ்வின்
பயன் யாவும் பொதுநலத்துக்கு பயன்
படக்
கூடியதே ஆகும்
பெரியார்
சொல்கிறார் இத்திருமணம் பிள்ளைப்
பேற்றிற்காக
செய்து கொள்ளப்பட்டது அல்ல
இயற்கை
இன்ப உணர்ச்சிக்காக செய்து கொள்ளப்
பட்டதும்
அல்ல வாழ்க்கைத் துணைக்காகவே
செய்து
கொள்ளப் பட்டது
ஒரு
துணை வேண்டுமென்றால் அதை அவர்
விருப்பத்துக்கு
தேடிக்கொள்வது சரியா அல்லது
பிறர்
விருப்பத்துக்கு தேடிக் கொள்வது சரியா
என்று
சிந்திக்க வேண்டுகிறார்
இத்
திருமணம் பற்றி குற்றம் சாட்டுகிறவர்கள்
பெரியார்
கழகத்தின் எந்தக் கொள்கையை விட்டுக்
கொடுத்துவிட்டார்
என்று சொல்லி மெய்ப்பிக்கட்டுமே
இராஜாஜி
பெரியாருக்கு அந்தரங்கம் என்று
குறிப்பிட்டு
ஓர் கடிதம் எழுதினார் அதனால்
அதை
பெரியார் வெளியிடவில்லை அவர்
மறைவுக்குப்
பின் அது வெளியிடப் பட்டது
அதில்
இராஜாஜி "30
வயதுப் பெண்தங்களிடம்
எவ்வளவு பக்தியும் அன்பும் இருந்த போதிலும்
தங்களுக்குப்
பின் சொத்தை தாங்கள் எண்ணுகிறபடி
பரிபாலனம்
செய்வாள் என்று நம்புவதில் பயனில்லை
"
என்று
மணியம்மையாரைப் பற்றி எழுதியிருந்தார்
இராஜாஜி
மணியம்மையாரைப் பற்றிப் போட்ட
கணக்கு
உலகியலில் போடப்படும் சராசரிக்
கணக்கு
அய்யாவின் கணக்கு ஆச்சரியாரின்
மூளைக்கே
எட்டாத தெளிவும் தீர்க்கமும்
நிறைந்த
கணக்கு என்பதும் ,அவர் வைத்த
நம்பிக்கை
எவ்வளவு சிறப்பாக வீண்போகாத
நம்பிக்கை
என்பதும் எடுத்த முடிவு எவ்வளவு
சரியான
முடிவு என்பதும் இன்று இந்த உலகே
புரிந்து
கொண்டுள்ளது
அன்னை மணியம்மையார் அய்யா அவர்களை
95 வயது வரை கட்டிக் காத்தது மட்டு
மின்றி
அவர்
மறைந்த 1973
ஆம் ஆண்டுக்குப் பிறகு
அவ்வியக்கத்திற்குத்
தலைமை தாங்கி
கண்ணை
இமை காப்பது போல் நெருக்கடி
காலத்திலும்
காத்து அவரது அறக் கட்டளை
யை
வளர்த்தார்கள்
அவர்களுடைய
சொந்த பயன்பாட்டுக்காக
அய்யா
அளித்த சொத்துக்களையும் மற்றும்
அவருக்கென
இருந்த சொந்த சொத்துக்களையும்
இணைத்து
ஒரு கல்வி அறப்பணிக் கழகமும்
கண்டு
சாகாச் சரித்திரப் புகழ் பெற்று
கலைஞருக்கு
சிலை வைக்க அதேபோல் பெரியார் விரும்பினார் அந்த விருப்பத்தை அன்னை மணியம்மையார் நிறைவேற்றினார்கள்
அன்னை
மணியம்மையார் 16.3.78ல் மறைந்தார்கள்