Thursday, December 31, 2015

தந்தை பெரியார் கவிதை - சுயமரியாதை



சுயமரியாதை



1898 முதல் 1930 வரை
நியமிக்கப்பட்ட 9 நீதிபதிகளில் 8 பேர் பார்ப்பனர்
ஒருவர் நாயர்
உதவி கலக்டர் 140 பேரில் 77 பேர் பார்ப்பனர்
வெகுண்டெழுந்த டி எம் நாயரும்
பி தியாகராயரும்
தென்னிந்திய நல உரிமைச்சங்கம்
என்னும் நீதிக்கட்சியை
துவங்கினர் பனகல் அரசர்
நடேசனார்  ஆகியோர்
ஒத்துழைத்தனர்

1925ல் குடியரசைத் தொடக்கினார்
ஈவெரா உள்ளதை
உள்ளபடியே சொல்லும்
இதழ்கள் இல்லாததால்
எல்லோரும் சமநிலைக்கு
வர வேண்டுமானால்
தாழ்த்தப்பட்டவர்கள்  சமநிலைக்கு
வர வேண்டுமானால்
வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
வேண்டும் என்றார் ஈவெரா


பார்ப்பனர்களிடம் அரசியலில்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
என்ற பிட்டி தியாகராயரின் சொற்கள்
ஈவெரா வுக்கு விழிப்புணர்வை
ஏற்படுத்தியது



சுயமரியாதை  இயக்கக்
கருத்துக்களை பரப்பினார்
பார்ப்பனர் அல்லாதார்
நன்மை பெறவேண்டும் என்றார்
நீதிக்கட்சிக் கூட்டங்களில்
பேசினார் வெறும்
சுயராச்சியத்தால்  பலனில்லை
என்று அறிவித்தார்


பெங்களூரில் காந்தியாரை
சந்திக்கிறார் மூன்று
கோரிக்கைகளை வைக்கிறார்
காங்கிரசை ஒழிக்க வேண்டும்
சாதியை ஒழிக்க வேண்டும்
இந்து மதத்தை ஒழிக்க வேண்டும்
காந்தியார் உட்ன்படவில்லை

1927 இந்தியர்களுக்கு வேறு
என்னென்ன சலுகைகள்
வழங்கலாம்  என்று
அறிவதற்காக சைமன் கமிசன்
வருகிறது  ஈவெரா ஒத்துழைக்கிறார்
1927முத்தையா முதலியார்
வகுப்புவாரி சட்டத்தை
நடைமுறைப் படுத்துகிறார்
மகிழ்ச்சி அடைந்த  ஈவெரா
குழந்தைகளுக்கு முத்தையா
என்று பெயர்
வைக்கச்சொல்கிறார் 
1928ரயில்வே தொழிலாளர்க்காகப்
போராடி 1 மாத சிறை செல்கிறார்

1929 பிப்ரவரி மாதம்
சென்னை மாகான முதல் மாநாடு
செங்கல் பட்டில்
நடந்தது அரிய
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
பு அ சௌந்தரபபானண்டியன் தலைவர்
பத்தாயிரக் கணக்கில்
இளைஞரகள் குழுமியிருந்தனர் 



சாதிப்பட்டங்களை விட்டுவிடுதல்
மதக்குறிகளை அணியாதிருத்தல்
புரோகிதத்தை அறவே ஒழித்தல்
கொவில்களில்  இடைதரகர்
இல்லாமலும் பூசைக்குக் காசு
செலவு செய்யாமலும்  இருத்தல் 
எல்லோருக்கும் கட்டாயத்
துவக்கக் கல்வி தருதல்
தீண்டாமை ஒழிந்திட
எல்லாப் பொது இடங்களிலும்
தாழ்த்தப்பட்டவர் நுழைந்திட சட்டப்படி
அனுமதி தருதல்
அரசு அலுவல்களில் முதலிடம்
தாழ்த்தப்பட்டோருக்கே  அளித்தல்
புறம்போக்கு நிலங்களை
தாழ்த்ப்பட்டோருக்கும் நிலமற்ற
 ஏழை விவசாயிகளுக்கும் வழங்குதல்

பெண்களுக்கு  சொத்துரிமை
வாரிசு உரிமை ,எந்தத்தொழிலையும்
ஏற்று நடத்திட சமஉரிமை
16 வயதுக்குப்பின் திருமணம் செய்ய ,
,விதவை மணவிலக்குப்பெற  ,
விதவை மறுமணம் புரிய உரிமை
துவக்கக்கல்வி ஆசிரியைகளாக
பெண்களையே  நியமித்தல்
ஏழை மாணவர்களுக்கு இலவச
உணவு,உடை,புத்தகம் தருதல்
ரயில்வே உணவு விடுதிகளில்
சாதிப்பாகுபாடு ஒழித்தல்
மத விச்யங்களில் அரசு
நடுநிலை வகிப்பததால்
பெரும்பான்மை மக்களின் உரிமை
பாதிக்கப்படுவதால் சட்டப்படி
அவர்களுக்குப் பாதுகாப்பு தருதல்

சுயமரியாதை  இயக்கம் கண்ட
ஈவெரா  அவர்களைப் பாரட்டுவதோடு
அவருடைய தலைமையில்
பரிபூரண   நம்பிக்கை தெரிவிப்பது
என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது






































Monday, December 21, 2015

தொகுதி -10

விரைவு  உணவுச் சாவடி 

91. CUSTOMER                     வாடிக்கையாளர்

92. SERVER                            பரிமாறுபவர்

93. COOK                                 சமையல்காரர்

94. OVEN                                  அடுப்பு 

95. GRILL                                  பொறியடுப்பு

96.CUP                                       கோப்பை  

97. SPOON                                 கரண்டி

98. COOL DRINKS                     குயளிர் பானங்கள்

99.SAUCE                                   கூட்டுச் சாறு

100. DUST BIN                           குப்பைத்  தொட்டி

Wednesday, November 18, 2015

தொகுதி - 9

பல்பொருள்  அங்காடி




81.CASH COUNTER                   பணம் பெறும் மேடை

82 COMPUTER                            கணினி

83. TROLLEY                              தள்ளு வண்டி
                               
84.SHELF                                    அலமாரித்  தட்டு

85.SALESMEN                            விற்பனையாளர்

86.HELPERS                                உதவியாளர்

87.BUYERS                                  வாங்குபவர்

88.PLASTIC GOODS                   நெகிழிப்  பொருட்கள்

89.VESSELS                                  பாத்திரங்கள் 


90.PROVISIONS                           மளிகை

Friday, November 13, 2015

தந்தை பெரியார் கவிதை - காங்கிரஸ்

ராஜகோபாலாசாரியாரும்
வரதராஜுலு நாயுடுவும்
ஈவெராவைக் காங்கிரசில் 
சேரும்படி கேட்டுக்கொள்கின்றனர்
திரு வி .. வும் வ..சியும் காங்கிரசில்
இருக்கின்றனர் ஈவெரா
காங்கிரசில் சேருகிறார்

Friday, October 23, 2015

தந்தை பெரியார் கவிதை - பணிகள்

கௌரவ மாஜிஸ்ட்ரேட் உள்பட
 29 பதவிகள்  தேடி   வந்தன
ஈரோட்டில் பிளேக் வந்தது
எல்லோரும்  ஊரைக்காலி
செய்தனர் ஈவெரா
துணிச்சலோடு  ஊரிலேயே
இருந்து ஏழைகளுக்கு
உதவினார் நல்ல பெயர்
கிடைத்தது நகரசபைத்
தலைவரானார் ஈவெரா


சாலைகளை அகலப்படுத்தினார்
செல்வந்தர்களின் கட்டிடங்களை
இடித்துத்தள்ளினார்  அவர்களின்
கோபத்தை  எதிர்கொண்டார்
காவிரி நீரைத் தொட்டிகளில்
தேக்கி குழாய்களில்
வீடுகளுக்கு விநியோகம்
செய்கிறார் அன்னையாரும்
பார்ப்பன பெண்களும்
நீர் தீட்டாகி விட்டதாக
கூறி புளியால் விளக்கி
 நீர் பிடிக்கிறார்கள்


அவர்களைப்  பார்த்து
இசுலாமியப்  பெண்களும்
அவ்வாறே செய்கிறார்கள்
ஈவெரா வுக்கு  சிரிப்பு
வருகிறது  அங்குள்ள வ உ சி
பூங்காவில் உள்ள
நீர்த்  தொட்டிகளில்
ஈவெரா  பெயர்
எழுதப்பட்டிருக்கிறது
ஈவெரா வின் ஆற்றலைக் கண்டு
மகிழ்ச்சியடைகிறார்கள் மக்கள்


பார்ப்பனர்கள்  பொறாமை
கொண்டு நகரசபைத் தலைவர்
பதவியிலிருந்து  நீக்கும்படி
அரசுக்கு  மனுப்போட்டனர்
அரசு ஆய்வு செய்தது
29 பதவிகளில் காட்டியுள்ள
திறமையையும் நாணயத்தையும்
ஈரோடு நகராட்சியின்
முன்னேற்றத்தையும் கண்டனர்
மனு பொய்யானது
என்ற முடிவுக்கு
அரசு வந்தது 
ஈவெரா தலைவராக
தொடர்ந்தார்; மேலும்
ராஜகோபாலாசாரியார்
சேலம் நகராட்சித் தலைவராக
இருந்தார் அவர்
சேலம் நகராட்சியை விட
ஈரோடு நகராட்சி
சிறப்பாக செயல் படுவதாக
ஈவெரா வைப் பாராட்டினார்



Monday, October 12, 2015

தந்தை பெரியார் கவிதை - துறவு

25 வயதில் தந்தையாரோடு
கோபித்துக்கொண்டு 
காசிக்குப் போகிறார்
ஈவெரா இரண்டு
தமிழ்நாட்டு அய்யர்களையும்
கூட்டணி சேர்த்துக்கொள்கிறார்
முதலில் விஜயவாடாவும்
பிறகு ஐதராபாதும் போகிறார்கள்
பகலில் உஞ்சவிருத்தி (பிச்சை) செய்வார்கள்
இரவில் அய்யர்கள் இருவரும்
புராண,  இதிகாசங்களிலிருந்து
சொற்பொழிவு செய்வார்கள்
ஈவெரா அதை தெலுங்கில்
மொழிபெயர்ப்பார் .அதோடு
கைச்சரக்கையும் சேர்த்துக்கொள்வார்
மக்கள்  சுவைத்துக் கேட்டனர்


காஞ்சிபுரம் முருகேச முதலியார்
தன் வீட்டில் தங்க வைத்திருந்தார்
காசிக்குப் புறப்படும் முன்
ஒரு மோதிரம் தவிர மற்ற
நகைகளைக் கழற்றி
முருகேச முதலியாரிடம்
கொடுத்தார் ஈவெரா
மூவரும்  காசிக்குப்பயணமானார்கள்
காசியில் அய்யர்கள் இருவரும்
ஈவெராவைப் பிரிந்தனர்


காசியில் திராவிடர்களின்
சத்திரங்கள் இருந்தன ஆனால்
சோறு பார்ப்பனர்களுக்கு மட்டுமே
போடப்பட்டது எச்சில் இலைகளை
உண்டார் தலையை மழித்து
துறவிக்கோலம் பூண்டார்
மலர்பறிக்கும் வேலை கிடைத்தது
சில நாட்களில் கை நழுவிப்போனது
அங்கே பார்ப்பனர்கள்
பெண்டிர் உட்பட
மதுவும், மாமிசமும்
உண்பதைக்கண்டார்
காசியை விட்டுப்புறப்பட
எண்ணினார் மோதிரத்தை
விற்றுவிட்டு ஆந்திராவில் உள்ள
எல்லூர் வருகிறார் வணிகர் ஒருவர்
ஈவெராவை அடையாளம் காண
வெங்கட்ட நாயக்கருக்கு
தகவல்  போகிறது


நாயக்கர் எல்லூர் வந்தார்
முருகேச முதலியாரிடமிருநது
நகைகளை வரவழைக்கிறார்கள்
சாப்பாட்டுக்கு என்ன செய்தாய்
என்று நாயக்கர் கேட்க
நீங்கள் செய்த அன்னதானத்தையெல்லாம்
வசூல் பண்ணிவிட்டேன் என்கிறார்
நகைகளைப் போட்டுக்கொண்டு
ஈரோடு திரும்புகிறார் ஈவெரா
வெங்கட்ட நாயக்கர் மண்டி
ஈவெராமசாமி நாயக்கர் மண்டி
ஆகிறது ஆற்றலைக் காட்டுகிறார்
எண்சுவடி, வாய்ப்பாடு ,பேரேடு எழுதுதல்
தகராறு  எழுந்தால் தானே
விசாரித்து  தீர்ப்பு வழங்குகிறார்






Saturday, September 26, 2015

தந்தை பெரியார் கவிதை - பிறப்பு



நான் யார் என்று
அவரே சொன்னது
"திராவிட சமுதாயத்தைத் திருத்தி
உலகில் உள்ள மற்ற
சமுதாயத்தினரைப் போல்
மானமும் அறிவும் உள்ள
சமுதாயமாக ஆக்கும் தொண்டை
மேற்போட்டுக்கொண்டு அதே
பணியாய் இருப்பவன் "
95 வயது வரை  வாழ்ந்து
எழுதியும் பேசியும் போராடினார்
திராவிட சமுதாயம் இன்று
இருக்கும் நிலைக்கு
அவரே காரணம்

பெரியாரின் பெற்றோர்
வெங்கட்ட நாயக்கரும்
சின்னத்தாயம்மையாரும்
சிறியதோர் தட்டுக்கடை
வைத்திருந்தார்கள்
மளிகைக் கடையாய்
மாறியது பின்னர்
மண்டிக் கடையாய்
மலர்ந்தது வணிகமோ
மண்டியில் வளர்ந்தது
நம்பிக்கை நாயகரானார்
பணத்தைக் கொண்டுவந்து
வங்கியில்  கொடுப்பதுபோல்
கொடுத்தார்கள் வளம் சேர்ந்தது
சின்னதாயம்மையாரும் கணவரின்
தொழிலுக்கு உதவினார்கள்


பத்தாண்டுகள் குழந்தையில்லை 
நோன்புகள் தொடர்ந்தன
கிருட்டிணசாமி,இராமசாமி,கண்ணம்மாள்
என மூன்று குழந்தைகள்
பிறந்தனர் கிருட்டிணசாமி 
சவலைப் பிள்ளையானதால்
இராமசாமியை நாயக்கரின்
சிறிய தகப்பனார்  மனைவி
விதவை  அம்மையாருக்கு
தத்துக்கொடுத்து  விட்டார்கள்
இராமசாமி கட்டுப்பாடில்லாமல்
வளர்ந்தார் படிப்பும் ஏறவில்லை
காலில் விலங்கு போட்டார்கள்
வாணிய செட்டியார் வீடுகளிலும்
இசுலாமியர் வீடுகளிலும்
நீரும் தின்பண்டங்களும் உண்டார்
அய்ந்து வகுப்புககு மேல
படிக்கவில்லை தத்துக் கொடுத்ததை
ரத்து  செய்து அன்னையார்
வீட்டுக்கு அழைத்துக்கொள்கிறார்கள்
இராமசாமியை மண்டியில்
போடுகிறார் நாயக்கர்
12 வயதில்   வணிக் ஆற்றலை
மெய்ப்பிக்கிறார்  இராமசாமி 

இப்போது வெங்கட்ட நாயக்கர்
குடும்பம் வசதி மிக்கதாகவும்
வைணவப் பற்று மிக்கதாகவும்
விளங்குகின்றது புராண இதிகாச
சொற்பொழிவுகள் நிறைந்திருந்தன
இராமசாமி அவற்றில் உள்ள
முரண்பாடுகளை உணர்ந்தார்
தர்க்க ஆற்றலும்  வளர்ந்தது  
எல்லாம் கடவுள் செயல்
என்று சொன்ன ஒரு
அய்யரின் கடையில் தாழ் வாரத்
தட்டியைத் தட்டி விட்டு
அதுவும் கடவுள் செயல்
என்றார் குறும்புக்கார இராமசாமி
பார்ப்பன அன்னதானத்தின்  நடுவில் 
துலுக்கனைக் கூட்டிக்கொண்டு
போனதால் அன்னதானம்
கெட்டுவிட்டதென்று நாயக்கரிடம்
பார்ப்பனர்கள் புகார் செய்ய
நாயக்கர் இராமசாமியை
செருப்பால் அடிக்கிறார்
இராமசாமி கலங்கவில்லை
வாரண்ட் இருக்கும்போது
அன்னதானம் நடக்கும் இடத்தில
ஒரு பார்ப்பான் ஒளிந்து
கொண்டதுதான்  காரணம்
என்றார் கலங்காமல்
பார்ப்பன பில் கலக்டருக்கு
மஞ்சள்,வெள்ளம்,கருப்பட்டி
கொடுதனுப்புவதும் 'சாமி '
என்று மரியாதை காட்டுவதும்
இராமசாமி கண்ணை உறுத்துகிறது

பெற்றோர் பணக்காரப் பெண்களை
இரமாசாமிக்குப் பார்த்தபோது
அவர் நடுத்தரக் குடும்பத்தில்
உறவினர் பெண்ணான
நாகம்மையாரை விரும்புகிறார்
அது காதல் திருமணம்
ஈவெராவும்  நாகம்மையாரும்
35 ஆண்டுகள் இல்லறம் நடத்தினர்
இருவரும் விருந்தோம்பல் சளைப்பதில்லை
ஆச்சாரத்தோடு இருந்த நாகம்மையாரை
தன் குறும்புத் தனங்களைக்காட்டி
பகுத்தறிவு  வழிக்குக் கொண்டுவந்தார்
ஈவெரா; அவரைத் தொட்டால்
தீட்டு என்று குளிப்பார்கள்
அன்னையார் .நாகம்மையாரை புலால்
சமைக்கப் பழக்கி விடுகிறார் ஈவெரா
தாலி இல்லாமல் இருந்தால்
தப்பில்லை என்று நம்ப  வைக்கிறார்
கோவிலுக்குப் போவதையும்
முரடர்களைக் கொண்டு
பயம் காட்டி
நிறுத்தி விடுகிறார்

Saturday, September 12, 2015

எஸ் பி எம் – 80





அன்புள்ள மாமா,

சமதர்ம இல்லத்தின்

வேர்களும்  விழுதுகளும்

விரும்புகின்ற  அப்பா,

பெரியப்பா, மாமா ,

அய்யா , பாட்டையா  நீங்கள்

இராம சிதம்பரம் (1923 – 2009)

31.12.2014 அன்று அவர்களுடைய  91 வது பிறந்த  நாள். எங்களுடைய தந்தையார் ரெமி என்கிற பெயரில் செய்யப்பட்ட வாசனை பொருட்களையும் பிரில் என்கிற பெயரில் செய்யப்பட்ட
எழுது  பொருட்களையும் சிவகங்கை , விருதுநகர், மற்றும் இராமநாதபுரம்  மாவட்டங்களில் அறிமுகம்  செய்து , முகவராக இருந்து 7 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தை கரை சேர்த்தார்கள், அம்மா கனகலட்சுமியின் துணையோடு. . அவர்களுடைய 70 வது பிறந்த நாளில் நான் படித்த கவிதை.


தொகுதி - 8

71. Elders                                முதியோர்

72 .Children                            குழந்தைகள்

73. Feeding                              உணவூட்டுதல் 

74.Talking                               பேசுதல்
  
75.Guitar                                  நரம்பிசைக்கருவி   

76.Chess                                   சதுரங்கம்  

77.Mop                                     தரை கழுவுகோல்     

78.Wastebag                             குப்பைப்பை      

79.T V                                       தொலைக்காட்சி   

80.Wheelchair                            சக்கர நாற்காலி


Sunday, August 23, 2015

தொகுதி - 7

61.BUS                                         பேருந்து

62.BUS TERMINAL                     பேருந்து  நிலையம் 

63.DRIVER                                   ஓட்டுநர்     

64.CONDUCTOR                         நடத்துனர்

65.PASSENGER                          பயணி

66.TICKET.                                  பயணச்சீட்டு 

67.e TICKET                                 மின் அட்டை

68.BUS STOP                              பேருந்து  நிறுத்தம்

70 MECHANIC                              பழுது பார்க்குநர்




Wednesday, August 19, 2015

எஸ்.பி .சுவாமிநாதன்

மாமா ,
ஆர்வோவுக்காக எல்லாம் செய்தீர்கள்
ஆர்வோ உங்களுக்கு
ஒன்றும் செய்யவில்லை
ஆனாலும் நீங்கள்
அதுபற்றிக் கவலைப்படவில்லை

சமதர்ம இல்ல வீட்டைக்
கட்டி  முடித்து
விரைவில்  குடியேறுங்கள்
சமதர்ம இல்ல  முகனூலில்
தங்கள்  தமிழ்ப்புலமை 
அருமையாக  இருக்கிறது
அது  தொடரட்டும்
என்சார்பிலும்  மீனா சார்பிலும்
பிறந்தநாள்  வாழ்த்துக்கள் 


தங்களுடைய 50வது பிறந்தநாளில்
-----------------------------------------------------------------
நான் படித்த கவிதை
------------------------------------

உண்மையான வயதைச் சொல்லி
உங்களுக்குக் கொஞ்சம்
நரை பூசியிருக்கிறார்கள்

நீங்களோ
மாப்பிள்ளைகள் வந்த பின்பும்
மாப்பிள்ளை போல் விளங்கும்
மார்க்கண்டேயர்’ ; ஐம்பதிலும்
உலகம் சுற்றும் வாலிபர்

நம் குடும்பத்தில் திரைப்படம் எடுத்தால்
நட்சத்திர வேடம் யாருக்குப் போனாலும்
நகைச்சுவை வேடம் உங்களுக்குத்தான்

படிப்பில் நீங்கள் இந்தியா போல்
வெண்கலம் மட்டுமே பெற்றதால்
ஆர்வோஒரு தங்கம் வென்றது

சென்னை என்கிற வான்வெளியில்
என்னை இறக்கிவிட்ட
விண்கலம் நீங்கள்

படித்திணைக்கு இடமிருந்தால் அதைச் சென்னையிலே
குடித்தனத்துக்கே கொடுப்பார்கள் என்றார் பாவேந்தர்
படித்திணைக்கும் இடமில்லாத அசோகநகர்
குடித்தனத்தில் அத்தையும் நீங்களும் நான்
படிப்பதற்கு இடம் தந்தீர்கள்

எங்கள் கைகோர்க்கும் படலத்திலோ
ஆச்சிக்கும் அண்ணனுக்கும்
தூதுவர் நீங்கள்

உங்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்
என்று நான் சிந்தித்தேன் -
வாழ்த்துச் சொல்லலாம் ;
வணக்கம் தரலாம் ;
வளர்ந்த பாசமும்
அன்பு கலந்த பக்தியும் உண்டு;
எல்லாம் கலந்தே கொடுக்கிறேன்
தங்களுக்குப்  பிடிக்கும் என்பதால்
காக்டெயில்
தங்களுக்குப்  பிடிக்கும் என்பதால்



Tuesday, August 18, 2015

அய்யா காரைக்குடி இராம சுப்பையா 100 வது பிறந்த நாள் விழாவில் படிக்கப் பட்ட கவிதை

சுப்பையா  என்று பெற்றோர் வைத்த பெயர் முதல் அடையாளம்
அரிமளத்தில்  இருந்து காரைக்குடிக்கு பிள்ளை வந்தது (சுவீகாரம்)
செட்டிநாட்டு  மரபின் அடையாளம்
பிள்ளை வந்த வீட்டில் மைத்துனர் சொ .முருகப்பர் தொடர்பு
மாற்றத்தின் அடையாளம்
பெரியாரின் சொற்பொழிவு பொது வாழ்க்கைக்கு மடை மாற்றிய
மாபெரும் அடையாளம்
பாவேந்தர் பாரதிதாசனொடு கொண்ட நட்பும்
குறள்  கழகம் நடத்தி ஆற்றிய பணிகளும் தமிழ்க் காதலுக்கு அடையாளம்
சமதர்ம இல்லம் என்கிற பெயர் சமதர்ம உள்ளத்துக்கு அடையாளம்
பெரியார் சொன்னதைப்போல் கடவுளை மறந்தார்கள்
அடுத்த வரியில் அவரே சொன்னதைப் போல்
மனிதனை நினைத்தார்கள்
மனிதனை நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான்
பெரியார் கடவுளை மற என்று சொன்னார்
இறுதி வரை அவர்கள் வாழ்க்கை அப்படியே இருந்தது
அது மாறாத கொள்கை உறுதிக்கு அடையாளம்