"மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள்
கொடியோர்த் தொறூஉம் என்ப; யாவதும்
கொடியர் அல்லர்எம் குன்றுகெழு நாடர்;
பசைஇய பசந்தன்று, நுதலே;
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தடமென் தோளே "
பாடலின் பொருள் :
அம்சம் செய்தலிலே முதிர்ந்த முருகக் கடவுள் ,கொடுமை
செய்தோரை ஒறுக்கும் என்று அறிந்தோர் கூறுவர்
எம்முடைய மலைகள் பொருந்திய நாட்டை உடைய தலைவர்
சிறிதும் கொடுமைப் பாடுடையவர் அல்லர்
இவ் வேற்றுமை எதனால் எனில் எம் நெற்றி அவர் என்னிடம்
விழைதல் வேண்டிப் பசந்து காட்டுவதாயிற்று
அவர் உள்ளம் நெகிழ்ந்து காட்டுவதாயிற்று எமது பெரிய மெத்தென்ற தோள்கள்
பாடலை பாடியவர் கபிலர்