“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
?
யானும் நீயும் எவ்வழி அறிதும் ?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந் தனவே”
பாடலின் பொருள் :
என் தாயும் நின் தாயும் எம்முறையில்
உறவினர் ? என்
தந்தையும் நின்தந்தையும் எவ்வகையில்
உறவினர் யானும்
நீயம் ஒருவரை ஒருவர் எவ்வகையில்
உரியவரென அறிந்தோம்?
செந்நிலத்துப் பெய்யும் மழை நீரானது
தானும் அம்மண்ணுடன்
கலப்புற்றுச் செந்நிறமாவது போல
நம்முடைய அன்பு கொண்ட
நெஞ்சங்கள் தாமே தம்மில் கலந்து ஒன்று
பட்டன .
பாடலைப் பாடியவர் பெயர் தெரியவில்லை
பாடலில் வரும் உவமையை வைத்து
செம்புலப் பெயல் நீரார் என்று பெயர்
வைத்துள்ளனர்