Thursday, May 31, 2018

குறுந்தொகை - பாடல் 400

சேயாறு செல்லாம் ஆயின் இடரின்று
களைஇக் காமம் பெருந்தோட்கு என்று
நன்றுபுரிந்து எண்ணிய மனத்தை யாகி
முரம்புகண் உடைய ஏகிக் களரிக்
கரம்பைப் புதுவழிப் படுத்த மதியுடை
வலவோய் இன்று தந்தனை தேரே
நோயுழந்து உறைவியை நல்க லானே .

பாடலின் பொருள் :

நீண்ட வெளியில் செல்வோமாயின், பெரும்தோளையுடைய  தலைவியின் காமமாகிய துயரை இன்று களைதல் நம்மால் இயலாதென்று,
நல்லதை விரும்பி எண்ணிய மனத்துடன் பாகனே நீ தேரைச் செலுத்தினை!
அதாவது அவ்வாறு நல்லதை  எண்ணிய விரைந்து கரம்பு நிலத்தில்
மனத்தையுடையை  ஆகி  , முரடான மேடுகள்  உடையும்படி விரைந்து , கரம்பை நிலத்தில் புதுவழி கண்டு செலுத்திய அறிவுத்திறனுடைய தேர்ப்பாகனே ! காம நோயால் பிரிவுத்துயரில் உழன்று வருந்தி இருந்த தலைவியை  ,நலமுடன் நீ தந்ததால் , இன்று  நீ தேரை மட்டுமா ஊருக்குள் தந்தனை ? இல்லை ; என் தலைவியையே உயிருடன் தந்தனை! ! நீ போற்றுதற்கு உரியை !


இப்பாடலை எழுதியவர் பேயனார்

குறுந்தொகை - பாடல் 350

அம்ம வாழி தோழி முன்னின்று
பனிக்கடுங் குன்றஞ் செல்லா தீம்எனச்  
சொல்லின மாயின் செல்லார் கொல்லோ
ஆற்றயல் இருந்த இருந்தோட்  டஞ்சிறை
நெடுங்காற் கணத்துள் ஆளறி வுறீஇ
யாறுசெல்  வம்பலர் படைதலை பெயர்க்கும் 
மலையுடைக்  கான நீந்தி
நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி  னோரே .

பாடலின் பொருள்

தோழி ! வாழி ! ஒன்று சொல்வன் கேட்பாயாக ! பாலை வழியின் பக்கத்திலிருந்த கரிய கொம்பையும் அழகிய சிறகையும் நீண்ட கால்களையும் கொண்ட கண ந்து ள்  என்னும் பறவையானது வழிப்பறி கள்வராம் ஆள்கள் மறைந்து இருப்பதை முன்னதாக அறிவுறுத்தும் .அவ்வாறு முன்கூட்டி அறிவுறுத்தி , அவ்வழியே செல்லும்
வணிகப் பயணிகளின் படைகளை அங்கிருந்து நீங்கி வேறு இடத்திற்கு மாற்றிப் போகச் செய்யும் .அத்தகைய மலைகள் சூழ்ந்த காடுகளைக் கடந்து , நிலை நில்லாதபொருள் வேட்கையால் பிரிந்த தலைவரின் முன் நின்று ,
'பனிக்காலத்தே தாங்க இயலாத  கடுந் துயரடைவோம் ,பிரிந்து செல்லாதீர் ' என முன்பே சொல்லினமாயின் சென்றிருப்பாரோ ?

இப்பாடலை எழுதியவர்  ஆலந்தூர்கிழார்

Thursday, May 17, 2018

குறுந்தொகை - பாடல் 310

புள்ளும் ;புலம்பின பூவும் கூம்பின
கானலும் புலம்புநனி உடைத்தே வானமும்
நம்மே  போலும் மம்மர்த்து  ஆகி
எல்லை கழியப் புல்லென் றன்றே ;
இன்னும் உலெனே - தோழி ! _ இந்நிலை
தண்ணிய கமழும் ஞாழல்
தண்ணம் துறைவற்கு உறைக்குநர்ப் பெறினே .


தோழி! புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின; கானலும் புலம்பு  தனி உடைத்து ; வானமும் நம்மே  போலும் மம்மர்த்து ஆகி எல்லை கழியப் புல்லென்றன்று! இந் நிலையை ,தண்ணிய கமழும் ஞாழல்  உள்ள தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறின் ,இன்னும் உளென்  


இப்பாடலை எழுதியவர் பெருங்கண்ணன்

குறுந்தொகை - பாடல் 275

முல்லை ஊர்ந்த கல்லுயர்பு ஏறிக்
கண்டனம் வருகம் ; சென்மோ- தோழி! 
எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல்லார் நல்லான் பூமணி கொல்லோ ?
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல்வில் இளையர் பக்கம் போற்ற,
ஈர்மணற் காட்டாறு வரூஉம்
தேர்மணி கொல்?- ஆண்டு இயம்பிய உளவே .

பாடலின் பொருள்
தோழி காளையை உடைய பசுவினங்கள் மாலை ஊரை வந்தடையும் .புல்லை உண்ட நல்ல  பசுக்களின் கழுத்திற்  பூண்டிருக்கும்  மணியோசையோ ?செய்யக்கருதிய செயலைச் செய்து முடித்த நிறைவுகொண்ட உள்ளத்தோடு ,வலிய வில்லை உடைய இளைய வீரர்கள் தன்   இரு பக்கமும், பாதுகாத்தவராக வந்து கொண்டிருக்க , ஈரமாகிய மணலையுடைய காட்டுவழியிலே வரும் தலைவனது தேரின் மணியோசையோ ?முல்லைக்கொடி படர்ந்திருக்கும் கல்லின் மேலாக ஏறி  நின்று  அங்கே ஒலிப்பனவாக உள்ளவை யாவையென யாமும் கண்டு வருவோம் ; வருவாயாக

இப்பாடலை  எழுதியவர் ஒக்கூர்  மாசாத்தி

Saturday, April 28, 2018

குறுந்தொகை - பாடல் 251

மடவ வாழி - மஞ்ஞை மாஇனம்
கால மாரி பெய்தென ,அதன்எதிர் 
ஆலலும்ஆலின  பிடவும் பூத்தன ;
கார் அன்று - இகுளை-தீர்க நின் படரே !
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர் ,
புதுநீர் கொளீ இய,உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே

பாடலின் பொருள்

தோழீ ! முன்னைய கார் காலத்துப் பெய்ய வேண்டிய மழையில் ,பெய்யாது தங்கிய பழைய நீரைக் கொட்டி விட்டுப் புதிய நீரைக் கடலில் முகப்பதற்காக ,இப்போது பெய்யும்தொடர் பற்ற காலத்து மழையின் முழங்கும் குரலைக் கேட்டு .மயில்களின் பெரிய கூட்டம் ,இதனைக் கார் கால மழையென்றே கருதி ,அம்முகிற் கூட்டத்திற்கு எதிரே மகிழ்ந்து ஆடுதலை மேற் கொண்டன .பிடவும் அவ்வாறே பூத்தன .அவை அறிவற்றன .இது உண்மையான கார்காலம் அன்று .உன் துன்பம் நீங்குவதாக !

இப்பாடலை எழுதியவர் இடைக்காடனார்  

குறுந்தொகை - பாடல் 210

திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த  வெண்ணெல் வெஞ்சோறு   
எழுகலத்து எந்தினும் சிறிது - என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக்  கரைந்த காக்கையது பலியே.

பாடலின் பொருள்
தலைவா! என் தோழியின் பருத்த தோலை நெகிழ்ச்சி செய்த பிரிவுத் துன்பத்திற்கு ,நல்நிமித்தமாகப் புதிய விருந்தினர் வருவர் என உணர்த்தக் கரைந்த காக்கையாலேயே, யான் தலைவியே
 'நீ வந்து விடுவாய்'' என ஆற்றுவித்தேன்.அதனால் அக் காக்கைக்குப் பலி உணவாக,திண்ணிய தேரையுடைய கண்டீரக் கோப்பெருநள்ளியின் காட்டிலுள்ள இடையர்கள் பல பசுக்கள் தந்த நெய்யுடன் ,தொண்டி நகரில் முழுவதுமாக விளைந்த வெண்ணெல் அனைத்தையும் கொண்டு சமைத்த சோற்றை ஏழுகலங்களில் ஏந்திக்கொடுத்தாலும் அது சிறிதேயாகும் !


இப்பாடலை எழுதியவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார்

Friday, April 20, 2018

குறுந்தொகை - பாடல் 175

    "பருவத் தேன்நசைஇப் பல்பறைத் தொழுதி
     உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை ,
     நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம் 
     மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்கு
     இரங்கேன்- தோழி!- எங்கு என்கொல்? என்று
     பிறர்பிறர் அறியக் கூறல்
     அமைந்தாங்கு அமைக; அம்பலஅஃது எவனே?

    பாடலின் பொருள்

    தேனை விரும்பிப் பலவாகிய  ' செவ்வியுள்ள மலர்களின் புதிய தேனி விரும்பி பலவாகிய வண்டுக்கூட்டம் வலி மை வாய்ந்த அலைகள் மோதுகிற  மணல்
    திணிந்த கரை ஓரத்தில் உள்ள நனைந்த புண்ணி யின் கரிய கிளையல்  மொய்த்த படி மலர்ந்த பூக்களையும் கரிய நீரையும் உடைய கடற் கரைக்கு த் தலைவன் பொருட்டு யான் இரக்கப்பட மாட்டேன் .இங்கே இவளுக்கு என்ன ஆயிற்று ஏன் இவள் பழித்து பேசுதல் அவரவர் மனம் போன படி அமையட்டும் , அவர்கள்  கூறும் அம்பல் என்ன செய்து விடும்? ஊரார் பழி கூறுவதாகத் தோழி சொன்னதற்கு என்ன செய்து விடும்? ஊரார் பழி கூறுவதாகத் தோழி சொன்னதற்கு தலைவி அதுபற்றி அஞ்சேல் என்றது இது .




















குறுந்தொகை - பாடல் 159

"தழைஅணி அல்குல் தாங்கல்செல்லா
நுழைசிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக,
அம்மெல் ஆகம் நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின:
யாங்குஆ  குவள்கொல் பூங்குழை?"  என்னும்
அவல நெஞ்சமொடு உசாவாக் 
கவலை  மாக்கட்டு- இப் பேதை ஊரே

பாடலின் பொருள்
தலியய் அணிந்த அல்குலுடன் எதயும் பொறுக்க மாட்டாத நுண்நிய சிறிய

இடைக்கு துன்பமாகும்படி அவளது அழகிய மெல்லிய மார்பு நிரம்பப் பருத்துத் திரண்டுருண்ட தேமல் உள்ள முலைகள் செப்புடன் மாறுபட்டமன .ஆகவே இப் பருவம் எய்திய பூ ங்குழை எது நிலையை அடைவாளோ என்று பருவம் எய்தித் தள தள வென்று  வளர்ந்து விட்டாளே என்ன ஆகுமோ என்று மகளை ப் பற்றிக் கவலைப் பாடமல் தோழி சாடுவதுபோல  பேசுகிறாள் ஆயினும் தலைவனுக்கு இவள்  தலிவனுக்கு இவள் இட் செரியாக் கூடும் என எச்சரிக்கிறாள்