Sunday, August 23, 2015

தொகுதி - 7

61.BUS                                         பேருந்து

62.BUS TERMINAL                     பேருந்து  நிலையம் 

63.DRIVER                                   ஓட்டுநர்     

64.CONDUCTOR                         நடத்துனர்

65.PASSENGER                          பயணி

66.TICKET.                                  பயணச்சீட்டு 

67.e TICKET                                 மின் அட்டை

68.BUS STOP                              பேருந்து  நிறுத்தம்

70 MECHANIC                              பழுது பார்க்குநர்




Wednesday, August 19, 2015

எஸ்.பி .சுவாமிநாதன்

மாமா ,
ஆர்வோவுக்காக எல்லாம் செய்தீர்கள்
ஆர்வோ உங்களுக்கு
ஒன்றும் செய்யவில்லை
ஆனாலும் நீங்கள்
அதுபற்றிக் கவலைப்படவில்லை

சமதர்ம இல்ல வீட்டைக்
கட்டி  முடித்து
விரைவில்  குடியேறுங்கள்
சமதர்ம இல்ல  முகனூலில்
தங்கள்  தமிழ்ப்புலமை 
அருமையாக  இருக்கிறது
அது  தொடரட்டும்
என்சார்பிலும்  மீனா சார்பிலும்
பிறந்தநாள்  வாழ்த்துக்கள் 


தங்களுடைய 50வது பிறந்தநாளில்
-----------------------------------------------------------------
நான் படித்த கவிதை
------------------------------------

உண்மையான வயதைச் சொல்லி
உங்களுக்குக் கொஞ்சம்
நரை பூசியிருக்கிறார்கள்

நீங்களோ
மாப்பிள்ளைகள் வந்த பின்பும்
மாப்பிள்ளை போல் விளங்கும்
மார்க்கண்டேயர்’ ; ஐம்பதிலும்
உலகம் சுற்றும் வாலிபர்

நம் குடும்பத்தில் திரைப்படம் எடுத்தால்
நட்சத்திர வேடம் யாருக்குப் போனாலும்
நகைச்சுவை வேடம் உங்களுக்குத்தான்

படிப்பில் நீங்கள் இந்தியா போல்
வெண்கலம் மட்டுமே பெற்றதால்
ஆர்வோஒரு தங்கம் வென்றது

சென்னை என்கிற வான்வெளியில்
என்னை இறக்கிவிட்ட
விண்கலம் நீங்கள்

படித்திணைக்கு இடமிருந்தால் அதைச் சென்னையிலே
குடித்தனத்துக்கே கொடுப்பார்கள் என்றார் பாவேந்தர்
படித்திணைக்கும் இடமில்லாத அசோகநகர்
குடித்தனத்தில் அத்தையும் நீங்களும் நான்
படிப்பதற்கு இடம் தந்தீர்கள்

எங்கள் கைகோர்க்கும் படலத்திலோ
ஆச்சிக்கும் அண்ணனுக்கும்
தூதுவர் நீங்கள்

உங்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்
என்று நான் சிந்தித்தேன் -
வாழ்த்துச் சொல்லலாம் ;
வணக்கம் தரலாம் ;
வளர்ந்த பாசமும்
அன்பு கலந்த பக்தியும் உண்டு;
எல்லாம் கலந்தே கொடுக்கிறேன்
தங்களுக்குப்  பிடிக்கும் என்பதால்
காக்டெயில்
தங்களுக்குப்  பிடிக்கும் என்பதால்



Tuesday, August 18, 2015

அய்யா காரைக்குடி இராம சுப்பையா 100 வது பிறந்த நாள் விழாவில் படிக்கப் பட்ட கவிதை

சுப்பையா  என்று பெற்றோர் வைத்த பெயர் முதல் அடையாளம்
அரிமளத்தில்  இருந்து காரைக்குடிக்கு பிள்ளை வந்தது (சுவீகாரம்)
செட்டிநாட்டு  மரபின் அடையாளம்
பிள்ளை வந்த வீட்டில் மைத்துனர் சொ .முருகப்பர் தொடர்பு
மாற்றத்தின் அடையாளம்
பெரியாரின் சொற்பொழிவு பொது வாழ்க்கைக்கு மடை மாற்றிய
மாபெரும் அடையாளம்
பாவேந்தர் பாரதிதாசனொடு கொண்ட நட்பும்
குறள்  கழகம் நடத்தி ஆற்றிய பணிகளும் தமிழ்க் காதலுக்கு அடையாளம்
சமதர்ம இல்லம் என்கிற பெயர் சமதர்ம உள்ளத்துக்கு அடையாளம்
பெரியார் சொன்னதைப்போல் கடவுளை மறந்தார்கள்
அடுத்த வரியில் அவரே சொன்னதைப் போல்
மனிதனை நினைத்தார்கள்
மனிதனை நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான்
பெரியார் கடவுளை மற என்று சொன்னார்
இறுதி வரை அவர்கள் வாழ்க்கை அப்படியே இருந்தது
அது மாறாத கொள்கை உறுதிக்கு அடையாளம் 

Monday, August 17, 2015

சித .இராமசாமி 60

அன்புத் தம்பி இராமுவுக்கு
அறுபது நிறைகிறது
பள்ளியில் படிக்கும் போதே
கடை வேலையிலும்
வயல்  வேலையிலும்
பயிற்சி கொடுத்தார்கள் அப்பா
அது எங்களுக்கு
வாழ்க்கைக் கல்வியாய் அமைந்தது


நானும் இராமுவும்
தோட்டத்தில் இருப்போம்
மின்சாரம் கூட கிடையாது
மாடுகளைப் பார்த்துக்கொள்வோம்
கடையையும் கவனிப்போம்
அப்போதே சமையல் செய்வான்
என்னிடம் சண்டைபோட மாட்டான்
அன்பாக நடந்துகொள்வான்


பொறியியல் பட்டம்
அண்ணாமலைப்  பல்கலையில்
பெரியார் கொள்கையில் பற்றுடையவன்
சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டான்
மணிமேகலை நல்ல துணையாய் அமைந்தாள்
இருவரும் சேர்ந்து
இரண்டு பிள்ளைகளையும்
அவையத்து முந்தியிருப்பச்  செய்தனர்
அருணும் சிதம்பரமும்  இரு நல் முத்துக்கள்
பிள்ளைகளிடம் நண்பனைப் போல நடந்து கொள்வான்










தம்பி இராமு தெர்மாக்ஸ் அமைப்பிலும்
வெற்றிகள் கண்டான்
அது போதாது என்று
யுனிவே என்ற தனி நிறுவனம் கண்டான்
எதனை எதனால் எவர்முடிப்பர்
என்றாய்ந்து  அதனை அவர்  கண்விடும்
ஆற்றல் மிக்கவன்
அதனால் வெற்றிகள் குவிக்கிறான்
முடிவுகள் - எல்லாம்
வெட்டொன்று துண்டிரண்டாய் இருக்கும்
 எங்கள் குடும்பத்தில்
ஈட்டுவதற்கும் சிக்கனத்துக்கும்
சிறந்த எடுத்துக்காட்டு 


அரசியலில் மட்டும் அல்ல
குடும்பத்திலும் கூட்டணி உண்டு
நான் வேலைக்கு சேர்ந்தபின்பு
குடும்பத்தில் எல்லோருக்கும்
பொங்கலுக்கு துணி எடுப்பதுண்டு
இராமு தான் வேலைக்குச்  சென்றவுடன்
தானே முன் வந்து அந்தக் கடமையைப்
பகிர்ந்து கொண்டான்
அன்று அமைந்தது  முதல் கூட்டணி
அது மட்டும் அல்ல எங்கே இருந்தாலும்
அம்மா அப்பாவுடன் கூட்டுப்பொங்கல் வைக்கிறோம்
அதுவும் தொடர்கிறது



அடுத்த கட்டத்தில்
தம்பி சுப்புவும்
குடும்பப் பொறுப்புகளை
பகிர்ந்து கொண்டான்
மூவரணி மலர்ந்தது
தம்பி வள்ளுவன்
கடமையைச் செய்வதில்
மூவரையும் விஞ்சுகிறான்



எங்களுக்குத்  துணையாய் நின்ற
மீனா, மணிமேகலை
திருநலசுந்தரி , அலமு
நால்வருக்கும் பாராட்டுக்கள்
அம்மாவும்  அப்பாவும்
வடம் பிடித்து  குடும்பத்தேரை
தலம் சேர்த்தார்கள்
அவர்களுக்கு  நன்றி


மனைவி நல்லாளொடும்  
அருண்,தேவி,அத்விக்காவோடும்
சிதம்பரப் பிள்ளையோடும்
நல்ல உடல்நலத்தோடும்
நீடு வாழ்கவென
அண்ணனும் அண்ணியும் வாழ்த்துகிறோம்
எங்களோடு சேர்ந்து
மாதவி, வள்ளியப்பன்
கனகம்தங்கவேல்
அருமைப் பேத்திகள் ரதி, கவிமொழி
அருமைப் பேரன் கவின்
அனைவரும் வாழ்த்துவர் !!