Sunday, November 1, 2020

சுப சுவாமிநாதன் 75-ஆம் ஆண்டு வாழ்த்து

 காரைக்குடி இராம. சுப்பையா . விசாலாட்சி இணையருக்கு மகனாய் பிறந்தார்கள். காரைக்குடியில் பள்ளிபடிப்பை முடித்தார்கள். 1964 ஆம் ஆண்டு சென்னை வந்து எல் வி அவர்களின் ORWO கம்பெனியில் பணிக்கு சேர்ந்தார்கள். 1967 ஆம் ஆண்டு நாச்சியார்புரம் நாகரத்தினதுடன் திருமணம் நடைபெற்றது. சுப்பு என்ற மகனும், பொற்கொடி, மலர்கொடி, சுந்தரி என்ற மகள்களும் உள்ளன. அனைவரையும் படிக்க வைத்து, திருமணம் செய்து, நல்ல மருமகள் மருமகன்களை கிடைக்கப்பெற்றவர்கள். அருமையான பேரன்கள் பேத்திகள். 1970 ஆம் ஆண்டு, அசோக்பில்லரில் வீடு வாங்கி குடிபோனார்கள். அப்போது என்னை இரண்டு வருடம் மகன் போல அத்தையும் மாமாவும் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் வீட்டில் இருந்துகொண்டே எம் ஏ ஆங்கிலம் படித்து வேலை தேடியும் வந்தேன். நிறைய உணவகங்களுக்கும், படத்திற்கும் அழைத்துப்போவார்கள். அவர்களோடும் பிள்ளைகளோடும் இருந்த அந்நாட்கள் மறக்க முடியாதவை. 1984 ஆம் ஆண்டு விருகம்பாக்கத்தில் வீடு கட்டி குடியேறினார்கள். எனக்கும் மீனாவுக்கும் திருமணத்தின் போது ஆச்சியிடமும் அண்ணனிடமும் தூது சென்றவர்கள். 1967 முதல் 1984 வரை ஜப்பான, ஜெர்மனி, ஐரோப்பா முதலிய வெளிநாடுகளுக்கு பல முறை பணி நிமித்தமாக சென்று வந்துள்ளார்கள். அன்பானவர்கள் பாசமானவர்கள் பன்முக திறமைசாலி, நிர்வாகத்திறன் கொண்டவர்கள், நகைச்சுவையாக பேசுவார்கள். விருந்தோம்பலுக்கு பெயர் போனவர்கள். தெரிந்தும் தெரியாமலும் நிறைய பேருக்கு உதவி செய்து வருகிறார்கள். தினமும் பல பயனுள்ள கருத்துள்ள செய்திகளை பகிர்ந்து வருகிறார்கள். அவர்களின் எழுத்து வல்லமை அதில் தெரிகிறது. அன்றிலிருந்து இன்றுவரை எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். என்னை பார்ப்பதற்கு கரோனா நேரத்தில் கூட வந்து பார்த்து சென்றார்கள். என் மீது அவர்களுக்கு அளவு கடந்த பாசம். மாமாவும் அத்தையும் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். 

அன்புடன் சி நாச்சியப்பா மீனா, மாதவி வள்ளியப்பா.கனகம் தங்கவேல். 

No comments:

Post a Comment