அன்புள்ள மாமா,
சமதர்ம இல்லத்தின்
வேர்களும் விழுதுகளும்
விரும்புகின்ற அப்பா,
பெரியப்பா, மாமா ,
அய்யா , பாட்டையா நீங்கள்
இப்போது ஏவிஎம் தந்த
எஸ்பிஎம் கூட
கோவை கல்லூரிகளில்
திரைக்கலை பற்றியும்
எத்திராஜ் கல்லூரியில்
பாவேந்தர் பற்றியும்
சொற்பொழிவு ஆற்றினீர்கள்
சுழற்சங்ககளில் அரிமாசங்ககளில்
உரத்தசிந்தனை அமைப்பில்
வேதாத்திரி மகரிஷி மன்றகளில்
விரும்பும் பேச்சளார் நீங்கள்
எங்கே பேசினாலும் தொடர்புடைய
நூல்களை படித்து, குறிப்புகள் எடுத்து
பேசுகின்றீர்கள். பொருத்தமான
ஒரு குறளைச் சொல்லி
பேச்சை நிறைவு செய்கிறீர்கள்.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறாத
பேராசிரியர் நீங்கள் !
ரஜினிகாந்த் , கமல்
ஏவிஎம் சரவணன் , மருத்துவர் பத்ரிநாத்
போன்றவர்களோடு நட்பாக இருக்கும்
அதே நேரம் சாதாரண மக்களோடும்
நட்பு வட்டம் விரிகிறது.
உங்களுக்கான விழாக்களை
வேண்டாமென்று தவிர்த்தாலும்
மற்றவர்களுக்கான விழாக்களை
தேடித்தேடிப் போகிறீர்கள்.
பேரன் பேத்திகள்
கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்திகள்
நீங்கள் இருப்பது போலவே
உங்களிடம் பாசமாக இருக்கிறார்கள்
80 நிறைந்தது !!
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க !!
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க !!
very good . Useful for the people who cannot read , all kavithais can be enhanced to audio/video . Excellent work
ReplyDelete