தந்தை பெரியார் வசன கவிதை -விடுதலை
பெரியார் நடத்தினார் விடுதலையை
தன் பிரச்சாரத்திற்காக 1935 முதல்
பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கான தினசரி இதழ்
மாற்றப்பட்டது ஈரோட்டிற்கு
பெரியார் நடத்தி வந்தார் அதைத் தன்
சொந்த நிர்வாகத்தில் . வந்தார் எடுத்துக்காட்டி
காங்கிரசின் தவறுகளை தேர்தல் நேரத்தில்
உணர்ந்தனர் உண்மைகளை பொதுமக்கள்
இந்தி
எதிர்ப்புக் கிளர்ச்சியில் விடுதலை இருந்தது
பெருந்துணயாக அரசு நினைத்தது அதை
அடக்க வேண்டும் என்று
வந்தது சென்னை நகரசபைத் தேர்தல்
வெளியானது வாக்காளர்களுக்கு வேண்டுகோள்
எச்சரிக்கை அரசு சுமத்தியது வகுப்பு
வெறுப்பு
அரச வெறுப்பு குற்றம்
பதிப்பாளர் பெரியாரின் தமையனார்
ஈ வெ
கிருட்டிணசாமி அவர்களுக்கும்
ஆசிரியர் பண்டித முத்துசாமி பிள்ளை
அவர்களுக்கும் தலா ஆறு மாத
சிறை தண்டனை விதிக்கப் பட்டது
17.6.1940 அன்று பெரியார் விடுதலை
என்று தலைப்பிட்டு தலையங்கம்
எழுதினார் போரினால் காகித விலை
கூடியிருப்பதையும் பக்கங்களை குறைக்க
முடியவில்லை விலையையும் கூட்ட
முடியவில்லை ஏதாவது தனி முயற்சி
செய்ய வேண்டும்என்றார்
21.11.1940 அன்று பெரியார் விடுதலையை
வாரப்பத்திரிக்கை ஆக்கி விடலாமா ஈரோட்டிலிருந்து
சென்னைக்கு மாற்றிவிடலாமா என்று ஆலோசனை
கேட்டிருந்தார் 1.12.1940 லிருந்து 6 பக்கங்களாக
வந்து கொண்டிருந்த விடுதலை 4 பக்கங்கள் ஆனது
விடுதலைக்கு பிணையல் தொகை 2000
சென்ற ஆண்டு கட்ட வேண்டி இருந்தது
இந்த ஆண்டு பிணையல் தொகை ரூ 10000
கட்டவேண்டியிருக்கிறது 16.6.1949 அன்று
நீதிபதி முன்பு பிணையல்
தொகையை
மணியம்மையார் கட்டினார்கள்
விடுதலை இன்றும் வெளிவருகிறது
கி . வீரமணி ஆசிரியராக இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment