Friday, September 30, 2016

தந்தை பெரியார் கவிதை - நடிகவேள்

மெட்ராஸ் ராஜகோபால  ராதாகிருஷ்ணன்
(MADRAS RAJAGOPALA RADHAKRISHNAN)               
எம் ஆர்  ராதா  என்று அழைக்கப்பட்டார்
நல்ல நாத்திகர்.   கொண்டிருந்தார் ஈடுபாடு
பெரியாரின்  சுயமரியாதை  இயக்கத்தில்
நடித்த நாடகங்களோ 5000 க்கு மேல்
நடித்தார் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில்
நடிகவேள் பட்டம் பெற்றார்
இரத்தக் கண்ணீர் புகழ்  பெற்றது

திருச்சியில் திராவிடர் கழக மாகாண மாநாட்டில்
29.9.1945 ல்  பெரியார் தலைமையில்
நடைபெற்றது நடிகவேள் எம் ஆர் ராதாவின்
போர்வாள்  நாடகம் கண்டு களித்ததோ  இலட்சம் பேர்



11.5.1946 மற்றும் 12.5.1946 ஆகிய நாட்களில்
மாகாண  முதலாவது கருப்புச்சட்டைப்படை
மாநாடு நடைபெற்றது மதுரையில்
அமைக்கப் பட்டது பெரிய பந்தல்
வைகைப் பாலத்தின் கீழே
தொடர்வண்டி நிலையத்திலிருந்து
ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்
தலைவர்கள்  மாநாட்டுப் பந்தலுக்கு

20000 கருஞ்சட்டைத் தொண்டர்கள் அணிவகுக்க
எம் ஆர் ராதாவும் பாவலர் பாலசுந்தரமும்
இராணுவ கருப்புச்சட்டை உடையில்
குதிரை மீது அமர்ந்து அணிவகுப்பை நடத்தினார்கள்
இரட்டைக் குதிரை பூட்டிய வண்டியில்
வந்தனர் பெரியார் , அண்ணா  மற்றும்  முன்னணித்
தலைவர்கள் முதல்நாள் மாநாட்டிற்குப் பெரியார்
தலைமை தாங்கினார்.  அண்ணா விளக்கினார் திராவிடநாடு
பிரிவினைத் திட்டத்தை. கருப்புச்சட்டைப் படை
அமைக்கப் பட்டதின் நோக்கத்தை எடுத்துரைத்தார் சம்பத்.
சுயமரியாதை இயக்கத் தத்துவத்தை எடுத்துரைத்தார்
அழகிரிசாமி . காலிகள் நடத்தினர் கலகம்
வைத்தனர் நெருப்பு மாநாட்டுப் பந்தலுக்கு
இரண்டாம்  நாள் மதுரை காங்கிரஸ்
தலைவர் வைத்தியநாத அய்யர் தூண்டுதலால்

திருவாரூரில்  8.8.1946 அன்று பெரியார் பார்வையிட்டார்
1000 கருஞ்சட்டைப் படை அணிவகுப்பை
ராதா தாங்கினார் தலைமை கருஞ்சட்டையில்
குதிரை  மேல் அமர்ந்து 15000 மக்கள் கொண்ட ஊர்வலத்துக்கு

23.10.1948 அன்று நடைபெற்றது நடிகவேளின் நாடகம்
திராவிடர் கழக 19 வது மாகாண சிறப்பு மாநாட்டில் ஈரோட்டில்

7.8.1949 அன்று திருச்சி மாவட்ட19 வது  மாநாட்டில்

நடிகவேள் ஆற்றினார் உரை திருச்சியில்

No comments:

Post a Comment