Thursday, February 16, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - இனி

பெரியார் தொடர் கட்டுரை எழுதினார்
 21.3.1943 மற்றும் 28.3.1943 நாட்களில்
திராவிட நாடு இதழில் இனி வரும்  உலகம்
என்ற  தலைப்பில் . அதில் கம்பியில்லாத்
தந்தி சாதனம் எல்லோர்  சட்டைப் பையிலும்
இருக்கும் என்றார்  இன்று அலைபேசி (செல்போன்)
வந்திருக்கிறது அவர் சொன்னபடி
உருவத்தை தந்தியில் அனுப்பும்படி  வசதி
வரும் ஆளுக்காள் உருவம்காட்டி பேசும்படி
நிலை வரும்  என்றார் முன் யோசனையோடு
கட்செவி (whatsapp)  வந்திருக்கிறது
இனி ஆண் -பெண் சேர்க்கை நீக்கப் படலாம்
என்றார் 1974 ல் சோதனைக் குழாய் குழந்தை
அறிமுகமானது  அதே போல் கிராமங்களில்
நகரத்தில் உள்ள எல்லா வசதியும் இருக்க
வேண்டும்  என்றார் 1944ல்
அது    ஏவுகணை விஞ்ஞானி மேனாள் குடியரசுத்
தலைவர் மறைந்த ஏ பி ஜே 

அப்துல்  கலாம் கூறிய  (PURA )  திட்டம் ஆகும்

No comments:

Post a Comment