Thursday, February 9, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - மகிழுந்து

பெரியார் வீட்டில் இருந்ததை விட மிகுதியாக
மகிழுந்தில் (கார் )வாழ்ந்தார் பரப்புரை செய்து கொண்டே
1.2.1959 அன்று பெரியார் மகிழுந்து மூலமாக சுமார்
4000 மைல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்  
மணியம்மையார் ,ஆனைமலை ராமகிட்டிணம்மாள் ,
ஏ என் நரசிம்மன் ,கி .வீரமணி,,புலவர் கோ இமய வரம்பன்
ஆகியோரும் வந்தனர் பெரியாரோடு
சிக்கந்தராபாத் ,ஜான்ஸி ,நாகபுரி ,ஜபல்பூர்
வழியாக கான்பூர் சென்றனர்
கான்பூரில் பெரியார் பிற்படுத்தப் பட்டோர் பிரச்சினை
குறித்து ஆங்கிலத்தில் 2 மணி  நேரம் பேசினார்
பின்னர் லட்சுமணபுரி பல்கலைக்கழக யூனியனில்
சொற்பொழிவு  12ம் தேதி டெல்லி பயணமானார்
அங்கு ரிப்பப்ளிக்கன் கட்சியாரின் கூட்டத்திலும்
தமிழர்கள்கூட்டத்திலும் பேசினார் பெரியார்
17 ஆம் தேதி அங்கிருந்து கிளம்பி பம்பாய்க்கு
20ஆம்  தேதி   சென்று  சேர்ந்தார்  அங்கு பெரும்
வரவேற்பு கொள்கை முழக்கம் 25..2.1959 அன்று
பம்பாய் விட்டுக் கிளம்பி 28.2.1959 சென்னை
வந்து சேர்ந்தார்  பெரியார் 
வடநாட்டு சுற்றுப் பயணத்தை பாராட்ட
1.3.1959 அன்று சென்னை வாழ் மக்கள்
ஒரு லட்சம் பேர் ஊர்வலமும் 2 லட்சம்
பேர் கடற்கரை கூட்டத்திலேயும்  கலந்து
கொண்டனர்  'கரண்ட் ' நிருபர் பெர்னாண்டஸ்
பேட்டி கண்டு 4.3.1959 அன்று வெளியிட்டார்
கல்கண்டு இதழும் பெரியார் எல்லா மொழிகளிலும்
பேசுகிறார் என்று வெளியிட்டது  வட நட்டு ஏடுகளான
ஸ்டேட்ஸ்மென் ,அடிவானஸ் ,பயனீர் ,நேஷனல் ஹெரால்டு   மற்றும் உருது ஏடுகளான சியசத் ,அல்ஜமாயத் ஆகியவை பெரியாரின் பேச்சு ,கொள்கை ,போராட்டம்  பற்றி
செய்தி  வெளியிட்டன  நன் முறையில்
1961 ல் பெரியாருக்கு அன்பளிப்பாக மகிழுந்து
வழங்கினார்கள்  இப்போது  படுக்கை முதலிய
வசதியுடன் நகரும் வீடு போல சாலை ஊர்தி (வேன் )
ரூ 20000 க் கு  விலைக்கு வந்துள்ளது
தோழர்கள் அன்பளிப்பு வழங்குங்கள் என்று
வீரமணி விடுத்தார் வேண்டுகோள்
6.10.68 அன்று பெரியாருக்கு 'நகரும் குடில்' வழங்கப்பட்டது
கரூரில்  விழாவுக்கு கலைஞர் வர இயலவில்லை
நகரும் குடில் பெரியார் ,மணியம்மையார் வீரமணி
ஆகியோருடன் வடநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டது
7.10.1968 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு
செகந்திராபாதில் 9ஆம் தேதி தங்கி அங்கு
பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தார் பெரியார்
12ஆம் தேதி லக்னோ சேர்ந்தார் அங்கே
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தாழ்த்தப் பட்டோர் ,
பிற்படுத்தப் பட்டோர் ,சிறுபான்மையினர்  மாநாட்டை
துவக்கி வைத்து ஆராய்ச்சி மிக்க அரிய கருத்துக்களை
வழங்கினார் பெரியார் தமிழில்
பெரியாரின் தமிழ்ப் பேச்சை வீரமணி ஆங்கிலத்தில்
தர அதை இந்தியில் மொழிபெயர்த்து வழங்கினார்கள் 
திரும்பும் வழியில் ஐதராபாதில்  இரு நாட்கள் தங்கி
20.10.1968 இரவு பெரியார் குழுவினர் சென்னை திரும்பினர்
அவருடைய கால்படாத இடம் தமிழகத்திலே இல்லை
அவர் செல்லாத குக்கிராமம் இல்லை .அவர் பேசாத
பட்டி தொட்டியில்லை .அவருடைய குரலை எதிரொலிக்காத
மனைகளே இல்லை .கவிஞர் கருணானந்தம் நினைக்கிறார்
பெரியாருக்கு என்று தனியாக வீடு எதற்கென்று
அவர் இருப்பதெல்லாம் மகிழுந்திலே தான்
அவர் வாழ்வதெல்லாம் மகிழுந்திலே தான்
19.8.73 அன்று தஞ்சையிலே பெருவிழா வீரமணி
அவர்கள் கேட்ட சாலைஊர்தி (வேன்) நிதி கேட்டது
ஓரு லட்சம் ஆனால் திரண்டதோ ஒருலட்சத்து
அறுபதாயிரம் .  மீதியுள்ள ரூ 50000 நிதியாக
பெரியாரிடம் நிதியாக வழங்கப் பட்டது
ரூ 10000 பெரியார் அறக்கட்டளை சொற்பொழிவுக்காக
வழங்கப் பட்டது மகிழ்ச்சியோடுl
தங்கத்தாலான சாவியையும் வழங்கி பொன்னாடை
போர்த்தி சிறப்பித்தார் முதல்வர் கலைஞர்
அய்யாவின் பாசமிகு மருத்துவர்கள் கே .ராமச்சந்திர
பட் ,ஜான்சன் ஆகியோருக்கு மாலை அணிவிக்கப் பட்டது
ஊர்தியிலிருந்தபடியே பேசும்படி அமைத்து
குளிசாதன வசதியும் செய்தவர்கள்  எல் .ஜி .பாலகிருட்டிணன் நிறுவனத்தார் ஆவர்
இந்த வசதி மிக்க ஊர்தியை
பெரியார் பயன் படுத்தியது இரண்டாண்டுகள் தான்


No comments:

Post a Comment