Thursday, March 23, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - சாதி

பெரியாரின் பேச்சுக்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப் பட்ட
கட்டுரைகளிலிருந்தும்' பெரியார் இன்றும் என்றும் '
என்கிற தலைப்பில் விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கும்
நூலில் இருந்து எடுக்கப்பட்ட தொகுப்பு இது.
பெரியார் சொல்கிறார்  அவரது தொண்டு சாதி ஒழிப்புத்
தொண்டுதான் என்றாலும் அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள் ,மதம் ,சாஸ்திரம் பார்ப்பன ஒழிப்பு பிரச்சாரமாகத் தான் முடிகிறது கரணியத்தோடு
நமது நாட்டில் பார்ப்பான் ஒருவனைத் தவிர மற்ற
சாதியர்கள் தாழ்ந்தவர்கள் . கீழ் மேல் சாதிக் கலப்பு
என்று சொல்லும்படியான இழிவுத் தன்மையில் பிறந்தவர்கள்
என்பதும் நமது சாதித் தத்துவமாக இருக்கிறது
ஜபம் ,தவசு ,தீர்த்த யாத்திரை ,சன்யாசம் ,கடவுள் தோத்திரம் ,ஆராதனை இந்தக் காரியங்கள் பெண்களும் சூத்திரர்களும்
ஒரு போதும் செய்யக் கூடாது
சூத்திரன் சமஸ்கிருதம் படிக்கக் கூடாது
மனிதனுக்கு கடவுள் உணர்ச்சி தோன்றிய காலம்
தொட்டே இந்த நாட்டில் கீழ் சாதி -மேல் சாதி
உணர்ச்சி தோன்றி விட்டது
100 க்கு 3 பேர்களால் 100 க்கு 97 பேர்கள் மீது
சுமத்தப் பட்டிருக்கும் சூத்திரப் பட்டம்
ஒழிக்கப் பட முடிந்ததா
தீண்டாமை ஒழிப்புக்கோ சாதி ஒழிப்புக்கோ
முதலில் உங்கள் மதத்தை ஒழித்தாக வேண்டும்
ஒருவர் பின் ஒருவர் நிற்கும் வரிசையில் தேவேந்திர
குல வேளாளர் கடைசியில் நிற்கிறார்கள்
சூத்திரர்  என்பவர்களோ பார்ப்பானின் வைப்பாட்டி
மக்கள் என்று அமைக்கப் பட்டு விட்டது
சாப்பிடுவதற்கு இரண்டு பாகங்கள் இருக்கின்றன
ஒன்றில் பார்ப்பான் சாப்பிடுவதற்கும் இன்னொன்றில்
சத்திரியன் ,வைசியன் சூத்திரன் எல்லோரும்
சாப்பிடுவதற்கும் இருக்கின்றன
சாதி மரத்தையும் ,மத மரத்தையும் சேர்த்து
நெருப்பு வைக்க வேண்டும்
மனிதன் மலத்தைக் காலில் மிதித்து விட்டால் அந்தக் காலை மட்டும் தண்ணீர் விட்டுக் கழுவி விட்டால் அந்தக் குற்றம் போய் விடுவதாக கருதப்படுகிறது .ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தொட்டுவிட்டால் அதனால் ஏற்பட்ட தோஷம் அவன் தன் உடலை உச்சி முதல் உள்ளங்கால் வரை குளித்தால்  ஒழியப் போவதில்லை என்கிறார்கள்
மலத்தை விட மனிதன் எவ்வளவு  கேவலமாக மதிக்கப் 
படுகிறான் என்று பாருங்கள்
படையாச்சி ,பிள்ளை ,கவுண்டர் ,நாயுடு ,பறையன் ,
சக்கிலி என்பவர்கள் எல்லாம் ஒரே சாதி தான் ;
அதாவது சூத்திரர்கள் தாம்
சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி ,உடை ,பூணூல் ,முதலிய
சின்னங்களையெல்லாம் சட்ட பூர்வமாக தடுக்க வேண்டும்
அவ்வாறு செய்தால் சாதிகள் ஒழியும்
இந்து மதம் ஒழிந்தால் சாதி ஒழியும் ; அதே நேரத்தில்
பார்ப்பனீயமும் ஒழிந்து போகும்
கருப்பு உடை அணியக் கரணியம் நாம் இப்போது இழி சாதி மக்களாகவும் ,சூத்திரர்களாகவும் ,தாழ்த்தப் பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகத்தான் கொடியின் நடுவில்
உள்ள சிவப்பு நாம் அந்த இழிவிலிருந்து மீண்டு வருகிறோம்
என்பதைக் காட்டுகிறது
யோக்கியமான ஜனநாயகம் இருக்குமானால் ஷெட்யூல் வகுப்புக்கு  18% இடங்கள்   என்று ஒதுக்கி இருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காதே
மானம் உடையவனுக்கு மனிதன் என்று பெயர் . மானமும்
அறிவும் மனிதனுக்கு அழகு என்று சொல்கிறோம்
நம் முன்னோர்கள் ஆன அரசர்கள் எல்லாம் சாதியை
காப்பாற்றினார்கள் சாதியை காப்பாற்றித் தான்  புகழ் 
பெற்றார்கள்  சாதியைக் காப்பாற்றுகிற கடவுளைத்தானே நாம் கும்பிடுகிறோம்
நாம் கும்பிடுற கடவுள் சாதியை காப்பாற்றுகிற கடவுள் அல்ல  என்று
யாராவது சொல்லட்டுமே
சுய ராஜ்யம் என்பது சாதி ,மதம் ,தர்மம் இவைகளை
காப்பாற்றுவது தானே
நம் கடவுள்            -    சாதி காப்பாற்றும் கடவுள்
நம் மதம்              -    சாதி காப்பாற்றும் மதம்     
நம் அரசாங்கம்                -    சாதி காப்பாற்றும் அரசாங்க,ம்
நம் இலக்கியம்              -     சாதி காப்பாற்றும் இலக்கியம்
நம் மொழி             -     சாதி காப்பாற்றும்  மொழி
ஒரு இராஜாவும் பள்ளிக்கூடம் கட்டியதாகக்காணோம்
பார்ப்பனர்களுக்கு       பாடசாலை கட்டியிருக்கிறார்கள்
எங்கே இருக்கிறது சாதி -பலாத்காரத்தில்
மனிதனை அடக்கச்சாதி இருக்கிறதே
தவிரஇயற்கையில் எங்கே இருக்கிறது       
அரசியல் சட்டத்தை எழுதிய ஆறு பேர்களில்
நாலுபேர் பார்ப்பனர்கள் என்கிறார் பெரியார்
நான் ஏன் தாழ்ந்தசாதி என்று கேட்கஉரிமை
இல்லைஎன்றால் இது    என்ன   சுயராஜ்யம்
அரசியல்சட்டத்தில் இந்து மதத்திற்குப் பாதுகாப்பு   அளிக்கப்
பட்டிருக்கிறது இந்துமதத்தில் சாதிக்குப் பாதுகாப்பு   இருக்கிறது இதைதிருத்தி அமைக்க சாதி ஒழிப்புக் காரருக்குவசதி  இல்லை
வாய்ப்பும்இல்லை (368 வது பிரிவைப் படியுங்கள்)
சட்டத்தைக் கொழுத்திச் சாம்பலைசட்டம் செய்த
மந்திரிக்கு அனுப்பிக் கொடுங்கள் 
என்னை இப்பொழுது நீதிமன்றத்தில் நடைபெறும்
வழக்கில் என்னை நீண்டநாள் தண்டனை வழங்கி 
விடுவதால் பொதுமக்கள் யாரும் ஆத்திரப்படுவதற்கோ 
நிலை குலைந்து விடுவதற்கோ   ஆளாகாமல் மிக்க மகிழ்ச்சியோடு அச்செய்தியை வரவேற்க   வேண்டும் 
இந்த அரசியல் கொடி உனக்குப் பிடிக்கவில்லையானால்
நாட்டைவிட்டு வெளியேறி விடு என்று பேசியிருக்கிறார்
பண்டித ஜவஹர்லால் நேரு ; அவர் என்ன சாதி பார்ப்பன
புரோகித சாதி ; எந்த நிலையில் என்றால் இந்திய தலைமை
அமைச்சர் என்கிற நிலையில்
பெரியார்     நீதிமன்ற வாக்குமூலம்:
இந்த ஆட்சி கொடுமையான காட்டுமிராண்டிஆட்சி ;
அதாவது பச்சைப் பார்ப்பான் நீதி, நேர்மை அன்பு
அறிவு அற்ற கொடும் காட்டுமிராண்டி பார்ப்பனப்
பாதகர்கள் ஆட்சி    
பார்ப்பன வழக்கறிஞர்களை புறக்கணிக்க வேண்டும்
அவர்களிடம் எந்த வணிக தொடர்பும் வைத்துக் கொள்ளக்
கூடாது ;அவர்களின் உணவகங்களுக்கு அறவேசெல்லக்  கூடாது
என் பிறவி காரணமாகஎன் இன இழிவிற்குக் காரணமாக
இருக்கும் சாதியை ஒழிப்பதும்என் இன மக்களாகிய தமிழர்களுடையவும்
என் தாய் நாடான தமிழ் நாட்டைப் பனியா பார்ப்பனர்களின் அடிமைத்    தளையிலிருந்தும் சுரண்டலிருந்தும்    மீட்டு சுதந்திரமாக வாழ வைக்கவழி
 செய்வதுமான தனித் தமிழ் நாடு   பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும்
சாதி ஒழிப்பிற்காக ஒரே நாளில்   3500- 4000 பேர்கள் சிறை
சென்றதும் நமது கழகம் ஒன்றில் தான்


No comments:

Post a Comment