Thursday, March 9, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - பார்ப்பனர்

பெரியார் பேசுகிறார்
ஆத்மா ,மோட்சம் ,நரகம்  போன்றவற்றில்
பார்ப்பனர் புகுந்து அவர்களுக்கு வருமானத்தையும்
நமக்கு அறிவீனத்தையும் ஏற்படுத்துகிறார்கள்
பார்ப்பனத்  தோழர்களே நான் தனி மனிதத் தன்மையில்
பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன் சமுதாயத் துறையில்
அவர்கள் கடைப்பிடிக்கிற உயர்வும் அவர்கள் அனுபவிக்கிற
அளவுக்கு மேற்பட்ட விகிதமும் ஆகியவைகளில் தான்
எனக்கு வெறுப்பு இருக்கிறது .. நான் நமது நாட்டை
ஆங்கில நாட்டுத் தன்மைக்கும் நாகரிகத்துக்கும்
கொண்டுவரும் ஆசை உடையவன். .பார்ப்பன
சமுதாயம்  இதற்கு முட்டுக் கட்டையாக இருக்கிறது 
என்று நான் சரியாகவோ தவறாகவோ கருதுகிறேன்
நாங்கள் அப்படி இல்லை என்று பார்ப்பனர்கள்  காட்டிக்கொள்ள வேண்டாமா .உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நமது நாட்டை எவ்வளவோ முன்னுக்குக்
கொண்டுவந்திருக்க என்னால் முடியும்

பெரியார் பிராமணாள் ஹோட்டல் என்றிருப்பதை
எடுக்கச் சொன்னார் எல்லோரும் எடுத்தார்கள்
ஆனால் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள
முரளி கஃபே பிராமணாள் ஹோட்டல் பிராமணாளை
அழிக்க மறுத்தது பெரியாரும் விடவில்லை எட்டுமாதப்
போராட்டம் நடந்தது 1000 பேர் சிறை ஏகினார்  இறுதியில்
பெரியார் வெற்றி பெற்றார் 1958 மார்ச் 22 ஆம் நாள்
முரளீஸ் ஐடியல் காபி சாப்பாடு ஓட்டல் என்று பெயர்
மாறியது வெற்றிகரமாக.  
          தமிழ்ப் பேராசிரியரான கா .நமச்சிவாய முதலியாருக்கு சம்பளம் 81 ரூ சமஸ்கிருத ஆசிரியரான குப்புசாமி சாஸ்திரிக்கு சம்பளம் 350 ரூ பார்ப்பனர்களின் மொழிக்கு அத்தனை உயர்வு
இந்த  நாட்டில் இன்று பார்ப்பன சாதி சூத்திர சாதி
என்ற இரண்டு சாதிகளில் எல்லாம் அடங்கி விடுகிறது
இந்த இரண்டு சாதி மக்களுக்கும்  ,பதவி
ஆட்சித் தலைமை ஆகியவற்றில் ஜனத்தொகை 
எண்ணிக்கைக்கேற்ற விகிதப்படி, சாதிவாரி உரிமை
அளித்து அந்தப்படி அந்தந்த சாதியை அமர்த்துதல் வேண்டும்
அதற்கு கிளர்ச்சிகள் தான் தேவை என்றார் 
தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு எழுதியிருக்கும்
கவிஞர் கருணானந்தம் சொல்கிறார் பெரியார்  தமிழர்களுக்கு செய்த தொண்டில் ஆயிரத்தில் ஒரு பங்கு பார்ப்பன சமுதாயத்துக்கு செய்திருப்பாரே  ஆனால் அவரைக் கடவுள்  அவதாரமாக்கி சங்கராச்சாரியாரை விட அதிக மதிப்பும் மரியாதையும் கொடுத்து
மிகப் பெரியவராக்கி இருப்பார்கள் . பெரியார் பேசுகிறார்
சிறு பான்மையினராக இருக்கும் நீக்ரோக்கள்  பெரும்   பான்மையினராக இருக்கும் வெள்ளையர்களோடு சரி சமமாக கலந்து உண்பன உறங்குவன பெண் கொடுத்தல் வாங்க உட்படக் கலந்து பழகுகிறார்கள் 
பார்ப்பனர்கள் தங்களை மேல் பிறவி என்றும் நாம் கீழ் பிறவி
என்றும் கூறி கடவுள்   என்னும் கல் சிலை இருக்கும் இருக்கும் இடத்தில்
நுழையக்கூடாது வெளியில் இருந்து வணங்க வேண்டும்  என்றும்
கூறுவதை எதிர்ப்பதே நம் கிளர்ச்சியின்  தத்துவமாகும்
இந்து மதத்தை பார்ப்பனர்கள் வேதமதம் என்கிறார்கள்
தங்களை ஆரியர் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்
ஆங்கில அகராதிகளில் இந்துமதம் என்றால் பிராமண
மதமென்றும் கிறித்தவர் முகமதியர் அல்லாத மதம்
என்று குறிப்பிடப் பட்டுள்ளது
நான் எனது 92 ஆவது ஆண்டின் வேலைத் திட்டமாய்
பார்ப்பனப் பத்திரிக்கைகளை புறக்கணிக்க ஒரு இயக்கத்தை
துவங்கி நடத்தலாமென்று ஆசைப் படுகிறேன் ஆத்திரப் படுகிறேன்
என்கிறார் பெரியார் வேகத்தோடு 
சேலம் நகராட்சியில் ,பாளையம்கோட்டை நாகராட்சியில்
பார்ப்பனப் பத்திரிக்கைகளை  வாங்குவதில்லை என்று முடிவு செய்யப் பட்டது 
என்னைப் பொறுத்தவரை  தனியே பார்ப்பனர் மீது
எந்த வெறுப்புமில்லை அவர்கள் உயர்ந்தவர்கள்
என்கிற மனப்பான்மை  ஒழிய வேண்டும்
கொஞ்சம் அவர்கள் பக்கம் நான் சாய்ந்தால்
பகவான் ராமசாமி அல்லது மகான் ராமசாமி ஆகிவிடுவேன்
என்று குறிப்பிட்டார்.       94 வது பிறந்த நாள் விழாவில் 
இத்தனை கோவில் கட்டியிருக்கிறார்களே ஆரியன்
எவனாவது ஒரு கல்லை சுமந்திருப்பானா ஆரியப் பெண்
ஒரு கூடை மண் சுமந்திருப்பாளா   எந்த ஆரியனாவது  கோவிலுக்கு
ஒரு காணி நிலம் எழுதி வைத்திருப்பானா எல்லாம் திராவிடர் உழைப்பு  திராவிடர் சொத்து ஆனால் திராவிடன் உள்ளே போகக்கூடாது . இது என்ன  நியாயம்  என்கிறார் பெரியார்
தமிழகத்தில் விவசாயிகள் என்றாலும் தொழிலாளிகள்
என்றாலும் அனைவருமே  திராவிடர்கள்தாம் ஆரியர்
எவரும் வயலிலோ தொழிற்சாலையிலோ வேலை
செய்வதில்லை
 பார்ப்பனுக்கும் உடல் உழைப்புக்கும் வெகு தூரம்
நம் நாட்டில்தான் சூத்திரஜாதி பார்ப்பானக்கே உழைத்துப்
போடவும் அவர்கள் தங்கள் வயிற்றுக்கு வாய்க்கால்
வெட்டி உயிர் வாழவும் ஆன அமைப்பு முறை உள்ளது 
திராவிடர் கழகத்தின் முதல் கொள்கை வர்ணாசிரமமூட
 நம்பிக்கை ஒழிப்பு இது கடவுள்,மதம் பார்ப்பானுக்கு விரோதம்
இங்கிருக்கும் 69 ஐசிஸ் அதிகாரிகளில் 44 பார்ப்பனர்
6 கிறித்தவர் 2 வெள்ளையர் 1 வெளிமாகாணத்தார்
பார்ப்பனரல்லாதார் 4 பேர் தான்
29   ஐஏஎஸ்  அதிகாரிகளில்19 பார்ப்பனர்
3 மலையாளி 1 கிறித்தவர் தமிழரும்மற்றோரும்
சேர்ந்து 6 பேர்தான் உள்ளனர்
மகாத்மா காந்தியை ஒரு பார்ப்பான் சுட்டான்
கடவுள் ,மதம் ,பார்ப்பான்  முதலியவற்றால் மனிதனுக்கோ
சமுதாயத்துக்கோ தேவையில்லாதவைகளே கடமைகளாக
ஆக்கப்பட்டு இருக்கின்றன
திராவிட ஐஏஎஸ் அதிகாரியும் ,நரிக்குறவர் போன்ற
நாதியற்ற மக்களுக்கு நல்வாழ்வு நல்கிய பண்பாளர்
ஆர் எஸ் மலையப்பன் திருச்சி கலக்டர் ஆக இருந்த
போது பார்ப்பன நீதிபதிகள் அவரைப் பழி வாங்கி
விட்டனர் நியாயமில்லாமல்
மலையப்பன் தஞ்சை மாவட்டத்துக் கள்ளர்
வகுப்பை சேர்ந்தவர் 30 ஆண்டுகட்கு மேல்
நிர்வாகத்திறன்படைத்தவர் குளித்தலை   வட்டத்தில்
நில குத்தகைத்தகராறில் அவர் வழங்கிய தீர்ப்புக்கு
எதிராக நிலப் பிரபுக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில்   மேல்முறையீடு செய்தனர் அதனை விசாரித்த
இரு பார்ப்பன நீதிபதிகள் கலக்டார் தமிழர் என்பதால்
அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று
பரிந்துரைத்தனர் அவர் பொது மக்களின்
அபிமானத்தைப் பெற்றவர் ஆதலின் ஒரு லட்சம்
மக்கள் திரண்டு நீதிபதிகளை பாராட்டி இருந்த
இந்து ஏட்டினை கொளுத்தினர்
இந்திய அரசியல் சட்டம் பார்ப்பனர்களால்
எழுதப் பட்டதாகும்
தேசியம் பேசும் தமிழா இந்த நாட்டில் இவற்றை
எங்காவது காண முடியுமா பிராமணாள் முடிதிருத்தகம் 
பிராமணாள்   லாண்டரி  , கொத்து வேலை தோதாத்திரி அய்யங்கார்
மரமேறி மகாதேவசர்மா ,மாடுமேய்க்கும் மாதவராவ்
பிணம்சுடும் பிட்சமணி தீட்சதர் ,ஏர் உழும் ஏகம்பர அய்யர்
நடவு நடும் நாகலட்சுமி சாணம் எடுக்கும் விசாலாட்சி
இந்தக் கேள்வி 21.12.1957 அன்று விடுதலையில் வந்தது

No comments:

Post a Comment