Friday, February 16, 2018

குறுந்தொகை - பாடல் 77


"அம்ம வாழி தோழி யாவதும்
தவறெனின் தவறோ இலவே -வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்
அரிய கானஞ் சென்றோர்க்கு
எளிய ஆகிய தடமென் தோளே "

பாடலின் பொருள் :

தோழி கேட்பாயாக பாலைநில வழியே சென்று கள்வராலே கொல்லப்பட்ட அவருடைய உடலை மூடுதற்கு தழையை இட்ட கற்குவியல் நெடிய நல்ல யானைகட்கு செயற்கை நிழலாகப் பயன் படுகின்ற  கடத்தற்கரிய பாலை நிலம் சென்ற தலைவர் பொருட்டு ஆற்றாமையின் மெலிந்து இளைத்த பெரிய தோள்கள் சிறிதும் தவறுடையன ஆக மாட்டா


பாடலை பாடியவர் மதுரை மருதன் இளநாகனார்

1 comment:

  1. செய்தி தொகு
    பாலை நிலத்தில் செல்லும்போது வெயிலின் வெம்மையைத் தணிக்கவேண்டியும், இரவில் பதுங்கிக்கொளவதற்காகவும் அவ் வழியில் புதிதாகச் செல்வோர் மேட்டுநிலப் பகுதியில் உயர்ந்த மரங்களில் பதுக்கைகள் அமைத்துக்கொள்வர். அந்தப் பதுக்கைகள் யானைக்கு நிழலாகவும் பயன்படும். (என்னையும் அழைத்துச் சென்றால் என் தோள் அவருக்கு (யானைக்குப் பதுக்கை நிழல் போல) இன்பம் தருமல்லவா? - என்கிறாள் தலைவி தோழியிடம்.

    ReplyDelete