Thursday, May 17, 2018

குறுந்தொகை - பாடல் 310

புள்ளும் ;புலம்பின பூவும் கூம்பின
கானலும் புலம்புநனி உடைத்தே வானமும்
நம்மே  போலும் மம்மர்த்து  ஆகி
எல்லை கழியப் புல்லென் றன்றே ;
இன்னும் உலெனே - தோழி ! _ இந்நிலை
தண்ணிய கமழும் ஞாழல்
தண்ணம் துறைவற்கு உறைக்குநர்ப் பெறினே .


தோழி! புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின; கானலும் புலம்பு  தனி உடைத்து ; வானமும் நம்மே  போலும் மம்மர்த்து ஆகி எல்லை கழியப் புல்லென்றன்று! இந் நிலையை ,தண்ணிய கமழும் ஞாழல்  உள்ள தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறின் ,இன்னும் உளென்  


இப்பாடலை எழுதியவர் பெருங்கண்ணன்

No comments:

Post a Comment