Saturday, December 31, 2016

தந்தை பெரியார் வசன கவிதை - மூவலூர்

ராமாமிர்தம் அம்மையார் திருவாரூர் மாவட்டத்தில்
மூவலூர் எனும் ஊரில் கிருட்டிணன் -சின்னம்மாள்
இணையருக்கு மகளாகப் பிறக்கிறார் . பெற்றோர் 10ரூ  பணத்துக்கு
விற்றுவிடுகின்றனர் பொட்டுக் கட்டிக் கொள்வதற்காக
அந்தக் காலத்தில்  ஒரு சமூகத்தில் பருவம் எய்தாத பெண்களை
பொட்டுக்கட்டி தேவதாசியாக-  இருப்பதற்கு விற்று விடுவார்கள்
 அந்த சமூகத்தில் பிறந்தவர்தான் ராமாமிர்தம்
காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர்
அதை தெய்வத் தொண்டு என்று சொன்னார்     
தேவதாசிப் பெண்களை பாலியல் வன்முறைக்கு
ஆளாக்கினார்கள் கடவுள் பெயரால்
1917  தேவதாசி முறையை ஒழிக்கப் போராட்டம்
நடத்தினார் சங்கம் அமைத்தார் இசை வேளாளர்
சங்கம் என்றழைக்கப் பட்டது  அது
பொட்டுத் தாலிகளை அறுத்துவிட்டு அந்தப்
பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தார்
' தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் ' என்ற
கதை எழுதினார் சிவகிரி ஜமீன் வெள்ளைத் துரைச்சி
நாச்சியார் பொருள் உதவி கொண்டு ராமாமிர்தம்


அதைத் தாண்டி மற்ற சமமூகங்களில் உள்ள
வர்களுக்கு சாதி மறுப்புத் திருமணங்களும்
செய்து வைத்தார் குத்தூசி குருசாமி -குஞ்சிதம்
அப்படித் திருமணம் செய்து கொண்டவர்கள்
சாதி மறுப்புத்  திருமணங்கள்  மட்டுமல்ல
விதவைத் திருமணங்களும் நடத்தினார்
அவர் ஒரு அரசியல் வாதியும் கூட
காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தார்
வகுப்புவாரி ஒதுக்கீடு கேட்டு  காங்கிரஸ்
இயக்கத்தை  விட்டு பெரியார் வெளியேறும்போது
அவருடன் ராமாமிர்தமும் வெளியேறினார் 
' சுயமரியாதை இயக்கப் போராட்டங்களில்
கலந்து கொண்டார் ஆர்வத்தோடு
1938ல் பெரியார் நடத்திய இந்தி எதிர்ப்பு
போராட்டத்தில் கலந்து கொண்டார்
மருத்துவர் தர்மாம்பாள் தலைமையில்
திருச்சி யிலிருந்து சென்னை வந்தார்
வழியெல்லாம் இந்தி எதிர்ப்பு முழக்கத்தோடு
தேவதாசி ஒழிப்பு வேண்டுமென்று
மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி
வேண்டுகோள் வைத்தார் சத்திய மூர்த்தி
அய்யர் அது தெய்வத் தொண்டு என்று சொன்னார்
முத்து லட்சுமி அந்த தெய்வத் தொண்டை
உங்கள் குடும்பப் பெண்கள் செய்யட்டும்
என்று விடை கொடுத்தார் சினத்தோடு 
தேவதாசி  முறை  ஒழிந்தது 1947ல்
1962 ஆம் ஆண்டு மறைந்தது மூவலூர் நிலவு
1979ல் கலைஞர் உருவாக்கினார் மூவலூர்
ராமாமிர்தம் திருமணத் திட்டம் அவர்

நினைவைப்  போற்றும்  வகையில்   

1 comment: