ஐநூறைக் காணவில்லை ஆயிரத்தைக் காணவில்லை
கருப்பை
ஒழிப்பதாய்ச் சொன்னார்கள்
இரண்டாயிரம்
வந்திருக்கிறது கருப்பை வளர்க்க
புதிய ஐநூறு அச்சடிக்காமலேயே
பழையதை
ஒழித்தார்கள்
பணம்
வழங்கும் பொறிகள் (ஏ டி எம் ) இயங்கவில்லை
வங்கியெல்லாம் வரிசை
ஐம்பது
நாளில் சீராகும் என்றார்கள்
இன்னும்
ஐம்பது நாள் என்கிறார்கள்
நூறு
நாள் கழித்தேனும் மக்கள்,
வங்கிப் பணியாளர்கள்
நிலைமை
மாறட்டும் என்று பொங்கல் நாளில்
பொங்கலோ
பொங்கல் என்று வாழ்த்துவோம்!!
Super
ReplyDelete