Tuesday, January 10, 2017

பொங்கல் வாழ்த்து 2017

ஐநூறைக்  காணவில்லை ஆயிரத்தைக் காணவில்லை
கருப்பை ஒழிப்பதாய்ச் சொன்னார்கள்
இரண்டாயிரம் வந்திருக்கிறது கருப்பை  வளர்க்க
புதிய  ஐநூறு அச்சடிக்காமலேயே
பழையதை ஒழித்தார்கள்
பணம் வழங்கும் பொறிகள் (ஏ டி எம் ) இயங்கவில்லை
வங்கியெல்லாம்  வரிசை
ஐம்பது நாளில்  சீராகும் என்றார்கள்
இன்னும் ஐம்பது நாள் என்கிறார்கள்
நூறு நாள் கழித்தேனும் மக்கள், வங்கிப் பணியாளர்கள்  
நிலைமை மாறட்டும் என்று பொங்கல் நாளில்

பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்துவோம்!!

1 comment: