" வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை
ஆகுமதி
யார ஃ
தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கியாங்கு
இவளுயிர் தவச்சிறிது காமமோ பெரிதே
"
பாடலின் பொருள் :
மூங்கிலாகிய வேலியினையும் வேரின் கண்ணே
பழம் பழுத்தலைக்
கொள்ளும் பலாமரத்தினை உடைய மலைச்சாரலை
உடைய நாட
செம்மை உடையனாதலைக் கைக்கொள் ; எவர் அதனை
அறிந்தார் ?
சாரற் கண்ணே சிறிய கோட்டிடத்துப் பெரிய பழம் தொங்குவது போன்று
இவளுயிர் மிகச் சிறியது.இவளுற்ற காமமோ
பெரிய தாயிருக்கின்றது .
ஆதலின் நூற்றக் கணக்கான ஊறுகொண்ட ஆற்றிடத்து இரவு வருதலை
இனி விட்டு வரைந்து கொள்
பாடலைப் பாடியவர் கபிலர்
நயம்: தலைவன்அவளை மணந்து இல்லறம் பேணுவதற்கான உணர்வு எழும் என்பதாம்
சங்க இலக்கியங்கள் வாழ்வின் உண்மைகளையும் உணர்வுகளையும் மறைப்பதில்லை. ஒரு பெண்ணின் காம உணர்வைப் புலவர் கபிலர் எடுத்துரைக்கும் பாடல் இது. ஒரு சின்னக் கொம்பில் ஒரு பெரிய பலா தொங்குகிறது.எந்த நேரமும் அறுந்து விழும் என்ற எச்சரிக்கையின் இலக்கியமாய் அமைந்துள்ளது இப்பாடல் - சுபவீ
ReplyDeletethank you subavee
ReplyDelete