நிலத்தினும் நீரினும்
'நிலத்தினும் பெரிது வானினும்
உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே ''
இதன் பொருள் நாடனொடு கொண்ட நட்பானது
பெரிது ; உயர்ந்த்தது ' அளவிறந்த ஆழமுடையது எனக்கூறி
அதனையே சிறந்தது எனக் கூறுகின்றாள்.இதனால்
தலைவன் தலைவியின் பெருங்காதலை உணர்ந்து
அவளை விரைய மணந்து வாழும் வாழ்விலே
மனத்தை
செலுத்துபவ னாவான் . குறிஞ்சி 12 ஆண்டு வளர்ந்து மலரும் பூ
அதேபோல் தலைவி 12 ஆண்டில் பூப்பெய்தி நிற்பவள் .
பாடலைப் பாடியவர் தேவகுலத்தார்
நயம்:
சாரல் மலைப் பக்கம் குறிஞ்சி மரத்தின்
கொம்பு கரிய நிறம்
உடைய தாதலின் கருங் கோட் குறிஞ்சி
எனப்பட்டது . பூவில் தேனைக்
கவர்ந்து கொண்டு வந்து என்க .தேன்
ஆகுபெயராய் இறாலுக்கு ஆயிற்று
தலைவர் என்னை மறப்பாரல்லர் அவர் அன்பு
பெரிது என இயற்பட
மொழிந்தபடியாம் . அளத்தற்குரிய
தென்பாள் அகலம்,உயரம்,ஆழம்
ஆகிய மூன்றற்கும் தனித் தனியே சிறந்த
உவமை எடுத்தோதினாள்
திருவள்ளுவனாரும் ஞாலத்தின் மாணப்
பெரிது என்றார்.
எங்களின் அன்பு நிலத்தை விட அகன்றதாய், வானை விட உயர்ந்ததாய், கடலை விட ஆழ்ந்ததாய் உள்ளது என்னும் இப்பாடல், காதலின் இலக்கணம்! நாச்சியப்பன் தேர்ந்தெடுத்துள்ள நல்ல பாடல் இது!!
ReplyDelete