Saturday, December 30, 2017

குறுந்தொகை - பாடல் 38

" கான மஞ்ஞை அறையீன் முட்டை
 வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்று மன்  வாழி - தோழி உண்கண் 
நீரொடு ஓராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லு வோர்க்கே

பாடலின் பொருள் :
கானகத்தே மயில் ஈன்ற முட்டையினை   பாறையின் கண் குரங்குக்குட்டி உருட்டும் மலை நாடனுடைய நட்பு பெரிதாகும் .மை உண்ட கண்களில் பெருகு கின்ற நீரொடு ஒரு படியாக அவன் பிரியவும் அவனை நினையாமல் இருப்பதற்கான ஆற்றலை வன்மையாகப் பெற்றவர்க்கே அது என்றும் நன்மை உடையதாகும்.


நயம் : தலைவி அடையும் துன்பத்திற்கு இரங்காமால் பழி கூறி நிற்கும் ஊர்  

No comments:

Post a Comment