Friday, April 20, 2018

குறுந்தொகை - பாடல் 175

    "பருவத் தேன்நசைஇப் பல்பறைத் தொழுதி
     உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை ,
     நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம் 
     மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்கு
     இரங்கேன்- தோழி!- எங்கு என்கொல்? என்று
     பிறர்பிறர் அறியக் கூறல்
     அமைந்தாங்கு அமைக; அம்பலஅஃது எவனே?

    பாடலின் பொருள்

    தேனை விரும்பிப் பலவாகிய  ' செவ்வியுள்ள மலர்களின் புதிய தேனி விரும்பி பலவாகிய வண்டுக்கூட்டம் வலி மை வாய்ந்த அலைகள் மோதுகிற  மணல்
    திணிந்த கரை ஓரத்தில் உள்ள நனைந்த புண்ணி யின் கரிய கிளையல்  மொய்த்த படி மலர்ந்த பூக்களையும் கரிய நீரையும் உடைய கடற் கரைக்கு த் தலைவன் பொருட்டு யான் இரக்கப்பட மாட்டேன் .இங்கே இவளுக்கு என்ன ஆயிற்று ஏன் இவள் பழித்து பேசுதல் அவரவர் மனம் போன படி அமையட்டும் , அவர்கள்  கூறும் அம்பல் என்ன செய்து விடும்? ஊரார் பழி கூறுவதாகத் தோழி சொன்னதற்கு என்ன செய்து விடும்? ஊரார் பழி கூறுவதாகத் தோழி சொன்னதற்கு தலைவி அதுபற்றி அஞ்சேல் என்றது இது .




















No comments:

Post a Comment