"செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே
ஒல்வான் அல்லன் என்று அவர்
இகழ்ந்தனரே
ஆயிடை இருபேர் ஆண்மை செய்தபூசல்
நல் அராக் கதுவி யாங்கு என்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே ”
பாடலின் பொருள்:
நம் தலைவர் பிரிந்து செல்வார் என்று
எச்சரிக்கையாய் இராது அலட்சியமாய் இருந்து விட்டேன் .சொன்னால் தாங்க
மாட்டாள் என்று பிரியுமுன் சொல்லவில்லை .துன்ப உணர்வு இயல்பாகக் கொண்ட என் நெஞ்சம்
நல்ல பாம்பு கவ்விக் கடித்ததைப் போல் பெருந் துன்பத்தால் மயக்க மடைகிறது.
பாடலைப் பாடியவர் அவ்வையார்
No comments:
Post a Comment