Tuesday, January 9, 2018

குறுந்தொகை - பாடல் 41

" காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து
சாறுகொள் ஊறிற் புகல்வேன் மன்ற 
அந்தம் நண்ணிய   அங்குடிச் சீறூர் 
,மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென் -தோழி அவர் அகன்ற ஞான்றே ."

பாடலின் பொருள்:
தலைவர் பக்கத்திருப்பாராக அப்பொழுது மிகவும் மகிழ்ச்சியுற்று
திருவிழாக் கொண்ட ஊர் பொலிவுறுமாறு போலப் பொலிவுற்று
,மகிழ்வேன் . தலைவர் பிரிந்த பொழுதோ பாலை நிலத்து வழியிலே
பொருந்திய அழகிய குடிசைகளை உடைய சிறிய ஊரின்கண் உள்ள
அணில்கள்  விளையாடுகின்ற தனித்த வீட்டைப் போல பொலிவிழந்து 
வருந்துவேன்.

பாடியவர் பெயர் அதில் வரும் தொடரை வைத்து அணிலாடு முன்றிலார்

என்று வைத்துள்ளனர்

No comments:

Post a Comment