“பதலைப்
பாணிப் பரிசிலர் கோமான்
அரலைக்
குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்
குவளையொடு
பொதிந்த குளவி நாறுநின்
நறுநுதன்
மறப்பரோ மற்றே முயலவும்
சுரம்பல
விலங்கிய அரும்பொருள்
நிரம்பா
ஆகலின் நீடலோ இன்றே”
பாடலின்
பொருள் :
கிளைப்
பறவையை இயக்கித் தாளத்தோடு வாசிக்கும் பரிசிலர்
தலைவனது
அரலைஎனும் குன்றத்திலுள்ள அகன்ற
வாயை
உடைய ஆழமான சுனையில் பூத்த குவளை
மலர்களுடன்
சேர்த்துக் கட்டிய காட்டு மல்லிகைப்
பூக்கள்
மணக்கும் நின் நறுமணமுடைய நெற்றியைத்
தலைவர்
மறப்பாரோ ? மறக்க
மாட்டார் . பல பாலை நில
மறப்பாரோ
? மறக்க
மாட்டார் . பல பாலை நில
இடையிட்ட
நாடுகளிற் சென்று தேடும் அரிய பொருட்செல்வங்கள்
எவ்வளவு
முயன்றாலும் முற்ற முடியக் கிடைக்கப்பெறா
ஆகலின்
இனியும் பொருள் தேடுவதற்காக கால நீட்டிப்பு
செய்யார்
.விரைந்து திரும்புவார் .வருத்தத்தை
கைவிடு.
பாடலைப்
பாடியவர் மோசிகீரனார்
காதல், பிரிவு, கவலை எல்லாம் வாழ்வின் பகுதிகள். காலம் கடந்து வாழ்பவை. பிரிந்த தலைவனை எண்ணி வருந்தும் தலைவிக்குத் தோழி சொல்லும் ஆறுதல் இப்பாடல். உனக்குள்ள இந்த உணர்வு அவனுக்கும் உண்டு என்பதால் விரைந்து வந்துவிடுவான் என்கிறாள்.
ReplyDelete