"அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருவிலிக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பின்
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனனே
மணத்தற்கு அரிய, பணைப்பெருந் தோளே'"
பாடலின் பொருள் :
மலையருவியினை உடைய பரந்த நிலத்தின் கண் மலைநெல்லினை விதைத்து அந்நிலத்திடையே முளைத்த பசிய இலையினை உடைய
மலை மல்லிகையும் பசியமரலுமாகிய களையினைப் பறிக்கின்ற
காந்தள்ஆகிய வாழ்வேலியை உடைய சிறு குடி வாழ்வோர்
பசிப்பாராயின் தறுகண் மை உடைய யானையினது மருப்பினை
வல்வில் ஓரியின் கொல்லி மலைக்கண் எழுதப்பட்ட பாவைதன்னி
கண்டார்க்கு மடமை வரச் செய்பவள் ஆவாள் மூங்கில் போன்ற பெரிய
தோள்கள் தழுவுவதற்கு அரியன வாகும்
பாடலை பாடியவர் கபிலர்
No comments:
Post a Comment