"அரில்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்துறை ஊரன் பெண்டினை ஆயின், வு ஊர் சில ஆ குக நீ துஞ்சும் நாளே !
பலஆ குகநின் நெஞ்சில் படரே !
ஓவாது ஈயும் மாரி வண்கைக்
கடும்பகட்டு யாணை , நெடுந்தேர், அஞ்சி
கொன்முனை இரவு ஊர் போலச்
சிலஆ குக,நீ துஞ்சும் நாளே ."
பாடலின் பொருள்
பிணங்குதலை உடைய கொடியாகிய பிரம்பினது வரி அமைந்த
முதிர்ந்த பழத்தைஆழ்ந்த நீரை உடைய குளத்தின்கண்
வாழும் கெண்டை மீன் கவ்வித் தின்றற்கு இடமான குளிர்ந்த
துறைகளின் ஊரை உடைய இத் தலைவனுக்கு பெண்டாகிய நீ இத் தன்மை உடைய யானால் ஒழிவின்றி ஈதல் செய்யும் மழை போன்ற வள்ளன்மை உடைய கையினையும் களிற்று யானைகளயும் நெடிய தேரினையும் உடைய அஞ்சி என்பானுடைய அச்சத்தைச் செய்யும் போர்க்களத்தில்
இரவினை உடைய ஊரில் உள்ளாரி போன்று நின் நெஞ்சின் கண் துன்பம் பற் பல வாகுக நீ துயிலும் நாள் சிற்சில வாக
பாடலை பாடியவர் அவ்வையார்
No comments:
Post a Comment