Sunday, November 30, 2014

இரங்கற் பா

பிறந்தது பெரியகுளம் ஆனாலும்

காரைக்குடி அரசர்  

நம்   கவியரசர்

தன் பணி மறந்தபோதும் தவறாமல்

தமிழ்ப்பணி முடி அரசர்


நம் துரைஅரசர்

தனக்கும் பிள்ளைகட்கும்  தயங்காமல்

கலப்பு மணம் முடி அரசர்

கொள்கைப் பிடி அரசர்

பாவேந்தர் வாரிசென்று பரிந்துரைத்த

பகுத்தறிவுக் கொடி அரசர்

பாட்டுக் கொடை அரசர்

வாழும் புகழரசர்க்கு

வைத்தேன் தமிழ்வணக்கம்




(கவியரசு முடியாரசனார் அவர்களுக்கு பாடிய  இரங்கற்   பா)

No comments:

Post a Comment