Thursday, November 20, 2014

நதிகள்

மேகப்பிழிவு மழையாகும் ; அந்த

மழையின் தொகுப்பு நதியாகும்

நதிகள் ஓடி உணவாகும் ; அந்த

உணவில் உயிர்கள் பயிராகும்

நதிகள் பயிர்களுக்குத் தாய்ப்பால்

அவை பூமிப்பெண்ணின் நரைகள்.

இல்லை, பூமித் தாயின் ரத்த நாளங்கள்

சுற்றிக்களைத்த பூமியின் வியர்வை

இமையத்து  நதிகளுக்குக் குளிர் காய்ச்சல்

சென்னையில் அவற்றுக்கு கூவநோய்

பாலைவனங்களில் காணாமல் போனவர்கள்

பக்கத்து  மாநிலங்களின் சச்சரவுப்பொருள்

நதிகளில் முதலையுண்டு ; விழுந்தாரை

விழுங்குவதால் நதிகளே முதலையாகும்

நதிகளுக்கு அணைகட்டி அடைகாத்தால்


மின்சாரக் கோழிக்குஞ்சு வெளியாகும். 

No comments:

Post a Comment